'''யாழ்/ கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை''' [[இலங்கை]]யின் வடக்கே [[தென்மராட்சி]]ப் பகுதியில் உள்ள [[கச்சாய்]] என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆகும். யாழ்/ கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தற்போது பத்தாம் வகுப்பு வரை நடத்தபடுகிறது, இப் பாடசாலையில் இப்பொழுது 29 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே வேளை இப் பாடசாலை மகாவித்தியாலம் ஆக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக முயற்சி செய்து வந்தாலும் இதுவரை அது சாத்தியம் அற்றதாகவே உள்ளது. கச்சாயில் இருக்கும் மாணவர்களில் பலர் [[சாவகச்சேரி]] இந்துக் கல்லூரிக்கும், [[கொடிகாமம்]] திருநாவுக்கரசு மகா வித்தியாலத்துக்கும் செல்வதே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
[[File:பாடசாலை.jpg|thumb|left| யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலையின் தளத் தோற்றம்]]