இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ast:Rudyard Kipling |
சி →ஆரம்பக்கால பயணங்கள்: அறுபட்ட கோப்பு |
||
வரிசை 94:
[[படிமம்:Lahore railway station1880s.JPG|thumb|left|லாஹூர் இரயில் நிலையம்]]
1883ம் ஆண்டின் வேனிற்காலத்தில், கிப்ளிங், மலை பிரதேசமும், ஆங்கிலேயர் காலத்து இந்தியாவின் வேனிற்கால தலைநகரமுமான [[சிம்லா]]வுக்கு (இப்போது ஷிம்லா) விஜயம் செய்தார். அப்போது ஆறு மாதங்களுக்கு இந்தியாவின் வைஸ்ராயும் அரசாங்கமும் ஸிம்லாவுக்கு பெயர்வது வழக்கமாயிருந்தது. ஆகவே அது “பதவி மற்றும் உல்லாசத்திற்கான மையமாக” விளங்கியது.<ref name="plainsintro"/> கிப்ளிங்குடைய குடும்பம் வருடாவருடம் ஸிம்லாவுக்கு செல்வதும் லாக்வுட் கிப்ளிங் அங்கிருந்த கிறைஸ்ட் சர்ச்சில் பணிபுரியவும் கேட்டுக்கொள்ளப்பட ஆயிற்று. 1885 முதல் 1888 வரை ஒவ்வொரு வருடமும் வருடாந்திர ஓய்வுக்காக அவர் ஸிம்லாவுக்கு சென்றார். த ''கெஸெட்டிற்கு'' அவர் எழுதின பல கதைகளில் ஸிம்லா இடம்பெறலானது.<ref name="plainsintro"/> ஸிம்லா அல்லது எந்த ஒரு மலை பிரதேசத்திற்கு என் பெற்றோர் சென்றாலும் அந்த மாதம், எனக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்தது. ஒவ்வொரு மணி நேரமும் தங்கத்தில் விலை போனது. இரயிலிலும் சாலையிலும் உஷ்ணத்திலும் அசௌகரியத்திலும் ஆரம்பிக்கும். குளு குளுவென்ற மாலையில் முடியும். இரவு படுக்கையறையில் அனல் மூட்டும் நெருப்பு, அடுத்த நாள் காலையில், சுட சுட தேனீர், இப்படி முப்பது நாட்கள். குடும்பம் முழுவதும் சேர்ந்த களகளவென்ற பேச்சு. வேலை செய்யக் கூட அங்கு ஆயாசமாக இருந்தது. விளையாட்டு வேலை இரண்டும் கலந்து இரண்டும் சமமாகவே முடிந்தது.” என்று அவர் இந்த நேரத்தைக் குறித்து விவரித்தார்.<ref name="autobio"/> லாஹூரில், 1886ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 1887ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குமிடையே, ''அரசிதழில்'' சுமார் 39 கதைகள் வெளிவந்தன. இக்கதைகளில் பெரும்பாலானவை, கிப்ளிங்கின் முதல் உரைநடை தொகுப்பான ''ப்லெய்ன் டேல்ஸ் ஃப்ரம் த ஹில்ஸில்'' 1888ம் ஆண்டு ஜனவரி மாதம் [[கல்கத்தா]]வில் அவருடைய 22வது பிறந்த நாளுக்கு ஒரு மாதத்திற்கு பின்பு வெளியானது. அதற்குள் லாஹூரில் கிப்ளிங்குடைய காலம் முடிவுக்கு வந்தது. 1887ம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் ''கெஸெட்டின்''' இன்னும் பெரிய கிளை செய்தித்தாளான''' '' '''''ஐக்கிய மாகாணங்களின் அலாஹாபாதிலுள்ள'' த பையனியருக்கு''' அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருடைய எழுத்து தங்கு தடையின்றி தொடர்ந்தது. பின்வரும் ஆண்டு: ''சோல்ஜர்ஸ் த்ரீ'' , ''த ஸ்டோரி ஆஃப் த கேட்ஸ்பீஸ்'' , ''இன் பிளாக் அண்ட் வைட்'' , ''அண்டர் த டியோடார்ஸ்'' , ''த ஃபாண்டம் ரிக்சா'' மற்றும் ''வீ வில்லி விங்கி'' என்று குறுங்கதை தொகுப்புகள் ஆறினை வெளியிட்டார். இதில் மொத்தம் 41 கதைகள் இருந்தன, அவற்றில் சில சற்று நீளமாகவே இருந்தன. கூடுதலாக, ராஜ்புடானாவின் மேற்கத்திய பிராந்தியத்தில் ''த பையனியரின்'' சிறப்பு ஆசிரியராக அவர் எழுதின பல எழுத்துக்கள் பிற்பாடு ''லெட்டர்ஸ் ஆஃப் மார்க்கீ'' என்று தொகுக்கப்பட்டு, ''ஃப்ரம் ஸீ டு ஸீ அண்ட் அதர் ஸ்கெச்சஸ், லெட்டர்ஸ் ஆஃப் டிராவல்'' என்று வெளியிடப்பட்டன.<ref name="plainsintro"/>
|