அல்லாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
===பாடசாலைகள்===
 
===[[அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை]]===
முதன்மைக் கட்டுரை: [[அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை]]
 
யாழ் மாவட்டத்தில் தென்மராச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள கிராமங்களில் அல்லாரை ஒரு சிறிய கிராமமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வளர்ச்சியடைந்து வந்தது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு , வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கிவந்தத்து. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் அதுவித வசதியும் இருக்கவில்லை.
 
எனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடையவேண்டுமென்ற உயர்ந்தநோக்குடன் அல்லரையைச் சேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பெரு முயற்சியால் அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை தொடங்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டடத்தினை அமைப்பதற்கான தனது காணி ஒன்றை நன்கொடையாகக் கொடுத்து பாடசாலைக் கட்டடத்திற்கு அத்திவாரமிட்டார். முதலில் அதிபர் விடுதி ஒன்றும் பாடசாலை வகுப்பறைகளுக்காகக் கொட்டிலும் அமைக்கப்பட்டது.
பாடசாலை வரலாறு
 
அமரர் திரு. தம்பிமுத்து பாடசாலையின் முதல் அதிபராக நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் திரு. தம்பிமுத்து ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர்தற்போது அதிபர்வரை விடுதியில்திருமதி. தங்கியிருந்தார். இவரின் காலத்திலேயேயோகநாதன் பாடசாலை வளவின் கிழக்கு பக்கத்தில் ஒரு அறையுடன் 40 அடி நீளமுள்ள கட்டடம் அமைக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டில் புதியஅதிபர் கட்டடத்தில்பொறுப்பையேற்று வகுப்புகள்நடாத்தி நடத்தப்பட்டனவருகிறார்.
யாழ் மாவட்டத்தில் தென்மராச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள கிராமங்களில் அல்லாரை ஒரு சிறிய கிராமமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வளர்ச்சியடைந்து வந்தது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு , வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கிவந்தத்து. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் அதுவித வசதியும் இருக்கவில்லை.
 
எனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடையவேண்டுமென்ற உயர்ந்தநோக்குடன் அல்லரையைசேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பெரு முயற்சி எடுத்தார். எஸ் .கே. செல்லையா அவர்கள் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் அத்துடன் அல்லாரையில் புகழ்பூத்த அனைவராலும் போற்றப்படுகின்ற உதவி வழங்குகின்ற ஊர்ப் பெருமகனாகவும் திகழ்ந்தார்.
 
1930 ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டடத்தினை அமைப்பதற்கான தனது காணி ஒன்றை நன்கொடையாகக் கொடுத்து பாடசாலைக் கட்டடத்திற்கு அத்திவாரமிட்டார். முதலில் அதிபர் விடுதி ஒன்றும் பாடசாலை வகுப்பறைகளுக்காகக் கொட்டிலும் அமைக்கப்பட்டது.
 
அமரர் திரு. தம்பிமுத்து பாடசாலையின் முதல் அதிபராக நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் திரு. தம்பிமுத்து ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் அதிபர் விடுதியில் தங்கியிருந்தார். இவரின் காலத்திலேயே பாடசாலை வளவின் கிழக்கு பக்கத்தில் ஒரு அறையுடன் 40 அடி நீளமுள்ள கட்டடம் அமைக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டில் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
2வது அதிபராக 1936 ஆம் ஆண்டில் திரு. நல்லதம்பி பாடசாலை பொறுப்பை ஏற்றார். இவர் பணிபுரியும் காலத்தில் மதியபோசனம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே இதற்கு பக்கபலமாக 50 அடிக் கட்டடம் பழைய கட்டடத்துடன் இணைத்து L வடிவில் அமைக்கப்பட்டது. அத்துடன் திரு. கந்தப்பு என்னும் உதவி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்டவர்.
 
1938 ஆம் ஆண்டில் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இதே காலத்தில் தரம் 5 பொதுப்பரீட்சையும் நடைபெற்றது. தொடர்ந்தவருடங்களில் தரம் 7 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் கிணறும் கட்டப்பட்டது.
 
திரு. குமாரவேலு அதிபரின் காலத்தில் மாணவர் தொகை அதிகடித்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்ககையும் அதிகடித்தது. இவருக்கு அடுத்ததாக மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுவாமிப்பிள்ளை என்பவர் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டது.
 
இவரை தொடர்ந்து ஆறாவது அதிபராக எஸ்.பி. சுவாமிநாதன் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் மீசாலையைசேர்ந்த ஆசிரியர்களும் கடமையாற்றினார்கள். பாடசாலை முன்னேற்றமடைந்தது. திருமதி. பூரணம் பஞ்சாச்சரம் ஆசிரியர் குறிப்பிடத்தக்கவர். இவரின் காலத்தில் L வடிவமாக இருந்த கட்டடம் T வடிவமாக 50 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டது.
 
இவரை தொடர்ந்து ஏழாவது அதிபராக கோப்பாயைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்திலும் பாடசாலை முன்னேற்றம் கண்டது.
எட்டாவது அதிபராக திரு.தம்பிராசா பொறுப்பேற்றார். ஒன்பதாவது அதிபராக வரணியை சேர்ந்த திரு.தங்கராசா அதிபராகப்பொறுப்பேற்றார்.
 
பத்தாவது அதிபராக சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த திரு. வ. சுப்பிரமணியம் கடமையாற்றினார். இவரின் காலத்தில் அல்லாரையைச் சேர்ந்த நவசிவாயம் வல்லிபுரம் இடமாற்றம் பெற்று உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர்களின் காலத்தில் பாடசாலை பல துறைகளில் முன்னேறியது. முதல் முதல் இல்ல மெய்வலுநர்பொட்டி நடைபெற்றது. அத்துடன் மாணவர்கள் சுற்றுலா சென்றனர். திரு. சுப்பிரமணியத்தை தொடர்ந்து மீசாலையைச் சேர்ந்த திரு. பொ. மார்க்கண்டு பதினோராவது அதிபராக கடமையாற்றினார். இவரை தொடர்ந்து பன்னிரண்டாவது அதிபராக திரு. ந. பேரம்பலம் அதிபர் பொறுப்பை ஏற்றார்.
பதின்மூன்றாவது அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு. அருளானந்தம் அதிபராக நியமனம் பெற்று பாடசாலையை சிறந்த முறையில் முன்னேற்றினார். இவர் எஸ்.பி. சுவாமிநாதன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவரை தொடர்ந்து பதின்நான்காவது அதிபராக கச்சாயை சேர்ந்த செல்வி. திரவியநாயகம் வேலுப்பிள்ளை பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை சேவையாற்றினார். இவரை தொடர்ந்து திரு. சே. சிவபாதசுந்தரம் பாடசாலை இடம்பெயர்ந்திருந்த காலத்தில் அதிபர் பொறுப்பையேற்று நடத்தினார்.
 
2001 செப்ரெம்பரில் இருந்து திருமதி. சி. ஜெயக்குமார் பாடசாலை அதிபராக கடமையாற்றினார்.
2010 ஜனவரி முதல் தற்போது வரை திருமதி. க. யோகநாதன் பாடசாலை அதிபர் பொறுப்பையேற்று நடாத்தி வருகிறார்.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/அல்லாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது