தாவர உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 3:
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' (Herbivore) என்பது [[மரம்]], செடி, [[கொடி (தாவரம்)|கொடி]], [[புல்]] [[பூண்டு]] முதலியவற்றை உண்டு உயிர்வாழும் [[விலங்கு]] வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும்.
 
பொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் [[பாக்டீரியா]], [[அதிநுண்ணுயிரி]] போன்ற ஏனைய [[உயிரினம்|உயிரினங்கள்]] தாவர [[நோய்க்காரணி]]கள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் [[பூஞ்சை]]கள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணித்]] தாவரம் எனப்படும்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தாவர_உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது