உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
பெசாவரில், காந்தியின் முஸ்லிம் சீடரான [[கான் அப்துல் கப்பார் கான்]] தலைமையில் குடாய் கிட்மத்கர் என்றழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற 50,000 படைவீரர்களால் (அறப்போராட்ட செயல்வீரர்கள்)அறப்போராட்டம் வழிநடத்தப்பட்டது.<ref>Habib, p. 55.</ref> ஏப்ரல் 23, 1930 இல் [[கான் அப்துல் கப்பார் கான்]] கைது செய்யப்பட்டார். குடாய் கிட்மத்கரின் குழுவொன்று பெசாவரின் கிசா கானி (கதைச் சொல்லிகள்) பஜாரில் கூடியிருந்தனர். ஆயுதம் தரிக்காத இந்தக் கூட்டத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடுமாறு பிரித்தானிய அரசு ஆணையிட்டனர், அதில் 200-250 எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.<ref> name="Habib, p. 56" & Habib, p. 56.</ref> பஷ்டூன் சத்தியாக்கிரகிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறவழிப் பயிற்சியின்படி, துருப்புகள் அவர்கள் மீது சுட்டப்போது குண்டுகளைச் சந்தித்தனர்.<ref>Johansen, p. 62.</ref> ஒரு பிரித்தானிய இந்திய இராணுவப் பிரிவு, பெயர்பெற்ற ராயல் கார்வால் துப்பாக்கியால் கூட்டத்தைப் பார்த்துச் சுட மறுத்தனர். இதனால் முழு படைப்பிரிவும் கைது செய்யப்பட்டது, மேலும் பலர் ஆயுள் தண்டனை உட்பட கடும் தண்டனைப் பெற்றனர், <ref name="Habib, p. 56"/>
 
காந்தி, இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அவரது நெருங்கிய கூட்டாளி [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|இராசகோபாலாச்சாரி]], பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநராகப் பதவி வகித்தவர்; கிழக்கு கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டார். அவரது குழு [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளியிலிருந்து]] கடலோரச் சிற்றூரான [[வேதாரணயம்வேதாரண்யத்திற்குவேதாரண்யம்|வேதாரண்யத்திற்கு]] நடைபயணத்தைத் தொடங்கியது. அங்கு [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|இராஜாஜி]] சட்ட விரோதமாக உப்பை எடுத்தார். அவர் பிரித்தானியர்களால் கைது செய்யப்பட்டார். <ref Name="gopalgandhi" />
 
1930 இன் சட்ட மறுப்பானது விடுதலைப் போரில் முதல் முறையாக பெண்களிப் பேரளவில் பங்கேற்கச் செய்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சத்தியாக்கிரகத்தில் சுறுசுறுப்பாக பங்கேற்றனர்.<ref>"...first, it is from this year (1930) that women became mass participants in the struggle for freedom.... But from 1930, that is in the second non-cooperation movement better known as the Civil Disobedience Movement, thousands upon thousands of women in all parts of India, not just in big cities but also in small towns and villages, became part of the satyagraha struggle." Chatterjee, p. 41.</ref> காந்தி ஆண்கள் மட்டுமே உப்பு நடைப்பயணத்தில் பங்கேற்கக் கோரினார், ஆனால் இறுதியில் பெண்கள் இந்தியா முழுதும் உப்பினை தயாரித்தும் விற்கவும் செய்தனர். மூத்த காந்திய செயல்வீரரான உஷா மேத்தா, "எமது வயதான மாமி/அத்தைகளும் மூத்த-மாமி/அத்தைகளும் மற்றும் பாட்டிமாரும் அவர்களின் வீட்டில் உப்புத் தண்ணீரைக் கொண்டு வந்து சட்டத்திற்குப் புறம்பான உப்பினைத் தயாரித்தனர். பிறகு நாங்கள் உப்புச் சட்டத்தினை உடைத்து விட்டோம்!எனக் கூச்சலிட்டனர்." என விமர்சித்தார்.<ref>ஹார்டிமேன், ப. 113.</ref> விடுதலைப் போரில் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு இர்வினைப் பொறுத்தவரை " புதிய மற்றும் தீவிரமான செயல்பாடாக" இருந்தது. "காங்கிரசின் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவும் மறியலில் உதவவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இல்லங்களின் தனிமையிலிருந்து வெளிவந்தனர்.... அவர்களின் இத்தகைய போராட்டங்களின் போதான பங்கேற்பு காவற்துறையினரை ஓர் மகிழ்வற்ற செயலைச் செய்யத் தேவையை ஏற்படுத்தியது." என ஒரு அரசு அறிக்கை பெண்களின் பங்கேற்பு பற்றிக் கூறியது <ref> name="Johnson, p. 33">Johnson, p. 33.</ref>
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது