பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி மாற்றல்: fa:بهادرشاه (دوم)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Bahadur Shah II; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Royalty
|name = அபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார் <BRbr /> '''{{Nastaliq|ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر}}'''
|title = [[முகலாயப் பேரரசின் பேரரசர்]]
|othertitles = {{lang-ur|{{Nastaliq|بہادر شاہ دوم}}}}; [[முகலாயப் பேரரசர் பட்டியல்|முகலாயப் பேரரசர்]]
வரிசை 20:
|spouse 3 = சீனத் மகல்
|spouse 4 = தாஜ் மகல்
|successor = முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது<BRbr />வழிவந்தோர்: 22 ஆண் மக்கள், குறைந்தது 32 பெண் மக்கள்</br>
}}
 
வரிசை 27:
இரண்டாம் அக்பர் சா சானி, அவரது வாரிசாக பகதூர் சா சஃபாரரைத் தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா செகாங்கீர்|மிர்சா செகாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் சா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா செகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
 
== பேரரசராக ==
பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, [[தில்லிக் கோட்டை]]யிலும் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த [[அரசியல்]], இராணுவ சக்தியாக விளங்கினர். [[பிரித்தானிய இந்தியா]]வுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு [[ஓய்வூதியம்]] வழங்கப்பட்டதுடன், சில [[வரி]]களை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.
 
== புலவராக ==
பகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது [[கசல்]]களை இயற்றியுள்ளார். [[1857 இந்தியக் கிளர்ச்சி]]யின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் [[குல்லியத்-இ சஃபார்]] என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.
 
== 1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள் ==
[[Fileபடிமம்:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டெம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சா சஃபாரும், மகன்களும் உமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[Imageபடிமம்:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
1857 ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சி விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர். இந்துக்கள், முசுலிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> சஃபார் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
 
இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[உமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஒட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச் சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன், சஃபாரின் ஆண்மக்களான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
 
[[Imageபடிமம்:Zeenat Mahal.jpg|thumb|பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி]]
சஃபாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் [[சிறை]]யில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், சஃபாரும், அவரது மனைவி சீனத் மகலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
வரிசை 63:
</poem>
 
== குடும்பம் ==
[[Imageபடிமம்:Prince Fakhr-ud Din Mirza, eldest son of Bahadur Shah II, 1856.jpg|right|thumb|''இளவரசர் பக்ருதீன் மிர்சா'', பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)<ref>[http://images.vam.ac.uk/indexplus/result.html?_IXFIRST_=16&_IXSS_=_IXFIRST_%3d1%26_IXINITSR_%3dy%26%2524%253dIXID%3d%26_IXACTION_%3dquery%26%2524%253dIXOBJECT%3d%26_IXMAXHITS_%3d15%26%252asform%3dvanda%26%2524%253dIXNAME%3d%26_IXSESSION_%3dR1TSfYS86Hp%26%2524%253dIXPLACE%3d%26_IXadv_%3d0%26search%3dsearch%26%2524%253dIXMATERIAL%3d%26%2524%253ds%3dbahadur%26%2524%253dop%3dAND%26_IXFPFX_%3dtemplates%252ft%26%2524%253dsi%3dtext%26%2524%253dIXFROM%3d%26%2524%253dIXTO%3d&_IXACTION_=query&_IXMAXHITS_=1&_IXSR_=Sr3lXQCNhWo&_IXSPFX_=templates%2ft&_IXFPFX_=templates%2ft Prince Fakhr-ud Din Mirza] [[Victoria and Albert Museum]].</ref>]]
[[Imageபடிமம்:Sons of Bahadur Shah Zafar.jpg|right|thumb|200px|பகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.]]
பகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்<ref name="Wives_Of_Bahadur_Shah_Zafar">{{cite web | first=Abdullah | last=Farooqi | title=Bahadur Shah Zafar Ka Afsanae Gam | publisher=Farooqi Book Depot | url=http://www.kapadia.com/zaftrans.html| accessdate=2007-07-22}}</ref> இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
 
வரிசை 100:
பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் [[வங்காளம்|வங்காளத்தில்]] மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சஃபார் மகால்]]
 
== குறிப்புகள் ==
<References/>
 
வரிசை 134:
[[pnb:بہادر شاہ ظفر]]
[[ru:Бахадур Шах II]]
[[simple:Bahadur Shah II]]
[[sv:Bahadur Shah II]]
[[tr:II. Bahadır Şah]]
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது