கோட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
==கோட்டாறும் நிலப்படை==
கோட்டாறு, பிற்காலத்தில் ஒரு முக்கிய வணிகத்தலமாகவும், சமண இருப்பிடமாகவும் திகழ்ந்ததைப் போன்று, பிற்காலத்தில், அதாவது கி.பி. 985-1010 வரை நிலப்படை (Army) நிறுத்தும் தாவளமாகவும் மாறியது. சோழர்களின் பெரும் படையை கோட்டாற்றில்; தான் நிலைப்படுத்தினர். இப்படையின் தலைமைத் தளபதி வல்லன் குமரன் என்பாரின் தாவளத்தளம் இன்று ‘வல்லன் குமாரவிளை’ என்ற பெயருடன் சோழர்களின் படையெடுப்பை நினைவு கூறும் விதமாக அழைக்கப்படுகிறது. இந்த வல்லன் குமாரவிளையும் கோட்டார் கம்போளத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளதை நினைத்துப் பார்க்கலாம். அவ்விடத்தில் வாழ்கின்ற மக்களில் பெருவாரியானவர்கள் சாணார்கள் என்ற சமணர்களேயாவார். எனவே ‘கோட்டாறு’ தென்னிதியாவின் முக்கிய வணிகத்தலங்களில் பழமையானதாவும், சமணச்சமயப்பள்ளியாகவும், படைத்தாவளமாகவும், இந்திரன் பிணிதீர்த்த புண்ணியத்தலமாகவும் விளங்கியிருக்கிறது. ஆகம மதமாகிய இந்து மதம் தென்திருவிதாங்கூரில் கோலோச்சிய நாட்களுக்குப்பிறகு கோட்டாறு வெறும் ஒரு வணிகத்தலமாக மட்டும் விளங்குகிறது. பிற்காலத்தில், அதாவது 19 – ஆம் நூற்றாண்டில் தீர்திருத்த கிறிஸ்தவ மிஷனறியான கனம் ரிங்கல் தௌபே சூட்டினார் என்று ஆய்வுகளஞ்சி ஆசிரியர் திரு. பத்மநாபன் கூறுகிறார். அதற்கு முன்பு வரை இந்த தலம் கோட்டாறு என்றே அறியப்பட்டது.
 
== புனித சவேரியார் மறைப்பணி ==
1543இல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு [[இயேசு கிறிஸ்து]]வைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம். கி.பி. 1544-ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விசய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார். புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.
{{cquote|“They called me great king, but hereafter for ever they will call you the Great Father” }}என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது. <ref>வி. நாகம் அய்யா - திருவிதாங்கூர் நாட்டு கையோடு பக்கம் 297-298</ref> ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
 
== உள்ளடக்கிய பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோட்டாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது