பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
'''பிரிகேடியர் பால்ராஜ்''' ([[நவம்பர் 27]], [[1965]]- [[மே 20]], [[2008]], இயற்பெயர்: பாலசேகரம் கந்தையா, [[கொக்குத்தொடுவாய்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]]) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். [[தமிழீழம்|தமிழீழத்தின்]] பல போர்க்களங்களை வழிநடத்தியவர். [[1983]] ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். [[1991]] ஆம் ஆண்டு தொடக்கம் [[1993]] ஆம் ஆண்டு வரையும் பின்னர் [[1995]] ஆம் ஆண்டு தொடக்கம் [[1997]] ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான [[சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி]]யின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க [[2000]] ஆம் ஆண்டு [[ஆனையிறவு]]ச் சமரில் முக்கிய பங்காற்றினார்.
 
[[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|அமைதிப் பேச்சுக்களின்]] போது [[2003]] ஆம் ஆண்டு [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. [[2008]] ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். [[மே 20]], 2008 இல் [[செவ்வாய்க்கிழமை]] பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்<ref>[http://www.puthinam.com/full.php?2b24OOA4b33g6Df04dctVo0da0eA4AK24d3oImA3e0dM0Mtlce02f1eW2cc4OcY4be புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார் (புதினம்)]</ref>.
 
==சமர்களங்கள்==
* 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது, இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் முதன் முதலாக தொழில் காயமடைந்தார்.
* 1986ம் ஆண்டு முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் பகுதியை கைப்பற்ற முனைந்த இலங்கை இரானுவதுத்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்.
* 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் இந்திய இராணுவத்தின் டாங்கி ஒன்றை முதலாவது தடவையாக தகர்த்தது.
* 1987ம் ஆண்டு முல்லைத்தீவு இந்திய இராணுவ முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் முயட்சியுடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதல்.
* 1987ம் ஆண்டு தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவத்தை இடை மறித்து தாக்குதல், அத்தோடு தாக்குதலுக்கு உள்பட்ட இந்திய இராணுவத்தை மீட்க வந்த வேறொரு இராணுவ அணையையும் தாக்கியத்தில் இருபத்தைந்து இராணுவத்தினர் கொல்லபட்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது