வானதி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பொன்னியின் செல்வன் நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
கொடும்பாளூர் இளவரசியாக இருந்தாலும் வானதி அடிக்கடி மயங்கி விழுகின்ற கோழைப் பெண்ணாகவே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் கல்கி. வானதிக்கு வீரமூட்டுவதற்காக இறந்து போன முதலையை வைத்து விளையாட்டு செய்கிறாள், வானதியின் தோழி குந்தவை. அது இறந்த முதலை என்பதை அறிந்து கொண்டு சற்றும் பயம்கொள்ளாமல் இருக்கிறாள் வானதி. ஈழத்திற்கு செல்லவிருக்கும் இளவரசரின் முகத்தினை நேருக்கு நேராகப் பார்த்து மயக்கமிட்டு விழுகிறாள். அருண்மொழி வர்மனின் அக்காவான குந்தவைக்கு வானதியை அருண்மொழிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. சோழ நாட்டின் சேனாதிபதி [[பூதி விக்கிரம கேசரி (கதைமாந்தர்)|கொடும்பாளூர் வேளாருக்கும்]] அதே ஆசை இருக்கிறது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபற்றி இளவரசரிடம் உரையாடுகிறார்கள்.
 
சுந்தர சோழர் தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை வானதி அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை குந்தவையிடம் உரைக்கின்றாள். இளவரசர் அருள்மொழிமொழி வர்மன் கடலில் புயற்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனைப் பற்றி செய்தி எதுவும் கிடைக்காததால் அவன் இறந்துவிட்டான் என்று தஞ்சையிலிருந்து தூதர்கள் வந்து கூறுகிறார்கள். பழையாறை மக்கள் வெகுண்டெழுந்து பழையாறை மாளிகையில் கூக்குரல் எழுப்புகிறார்கள். இதனை அறிந்த வானதி மயக்கமிட்டு விழுகிறாள். அவளை குந்தவையும், வந்தியத்தேவனும் மீட்கின்றார்கள். வானதி நினைவிழந்து இருக்கிறாள் என்று நினைத்து வந்தியத்தேவன் பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனை விரும்புவதை கூறுகிறான். இதனை வானதி அறிந்து பூங்குழலி மேல் வெறுப்பு கொள்கிறாள்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வானதி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது