களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய [[கல்லாடனார்]] என்னும் புலவர், [[தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்|தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப்]] பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
==செயல்கள்==
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." <ref>புலியூர்க் கேசிகன், 2002. பக். 189 (அகநானூறு 199)</ref>என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார். இந்த [[நன்னன்]] கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட அரசன். சிறந்த வள்ளல். [[கடம்பின் பெருவாயில்]] இவனது தலைநகர். போர் [[வாகைப் பெருந்துறைவாகைப்பெருந்துறை]] என்னுமிடத்தில் நடைபெற்றது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/களங்காய்க்கண்ணி_நார்முடிச்சேரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது