பல்யானைச் செல்கெழு குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
|||
வரிசை 1:
{{விக்கிமூலம்|பதுற்றுப்பத்து மூன்றாம்பத்து}}
'''பல்யானைச் செல்கெழு குட்டுவன்''' [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில்]] ஒருவன். இவனது அண்ணன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]. இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். [[பாலைக் கௌதமனார்]] என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 [[பதிற்றுப்பத்து]] நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) <ref name="ReferenceA">பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
==பெயர்கள்==
இவனது பெயரில் உள்ள 'பல்யானைச் செல்' என்பது செல் (மேகம்) போன்று தோன்றும் இவனது யானைப்படை.
*பெரும்பல் யானைக் குட்டுவன் <ref>பதிற்றுப்பத்து 29</ref>
*பூழியர் கோ <ref name="பதிற்றுப்பத்து 21">பதிற்றுப்பத்து 21</ref>
*பொலந்தார்க் குட்டுவன் <ref name="பதிற்றுப்பத்து 23">பதிற்றுப்பத்து 23</ref>
==ஆட்சி==
*[[உம்பற்காடு|உம்பற்காட்டைத்]] தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான்.
*[[அகப்பா]]க் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான்.
*[[முதியர்]] குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான்.
*[[செருப்பாழி|செருப்பு நாட்டு]] மக்கள் [[பூழியர்]] இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.
*[[தோட்டி மலை]]க் கோட்டையை அழித்தான் <ref>உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25</ref>
*போர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான்.
*வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும்,
;கொடை
:இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான்.
;விழா
:யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு [[அயிரை மலை]]த் தெய்வத்தை வழிபட்டான்.
;துறவு
:இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான்.
;வேள்வி
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான்.
*பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான்.
==அடிக்குறிப்பு==
|