வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 75:
== வரலாறு ==
===பண்டைக்காலம்===
[[File:Paharpur 03.JPG|thumb|150px|left|வங்காளதேசத்தின் பகர்பூரிலுள்ள சோமாபுர மகாவிகாரை. இது இந்திய உபகண்டத்தில் உள்ள விகாரைகளில் மிகவும் பெரிய விகாரையாகும். இது வங்காளத்தின் தர்மபாலனால் கட்டப்பட்டது.]]
[[File:Shat Gombuj Mosque (ষাট গম্বুজ মসজিদ) 002.jpg|left|150px|thumb|பகர்கட் மசூதி நகரிலுள்ள அறுபது மாட மசூதி. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது ஐக்கிய நாடுகளின் உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.]]
பெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வர்ட பழைமை வாய்ந்தவை.<ref name="bharadwaj">{{cite book |last=Bharadwaj |first=G |editor=Majumdar, RC |year=2003 |chapter=The Ancient Period |title=History of Bengal |publisher=B.R. Publishing Corp}}</ref> இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். "பங்க்லா" அல்லது "பெங்கால்" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான "பாங்"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref name="congress">{{cite book |publisher=Library of Congress |url=http://memory.loc.gov/frd/cs/bdtoc.html |chapter=Early History, 1000 B.C.-A.D. 1202 |title=Bangladesh: A country study |editor=James Heitzman and Robert L. Worden |year=1989 |isbn=82-90584-08-3 |oclc=15653912}}</ref>
கி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக, நந்த, மௌரிய, சுங்க, மேகவாகன, மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பீகாருடன் இணைந்து அப் பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புருந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது.
மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால் வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது.
அராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன.<ref name="eaton">{{cite book |last=Eaton |first=R |year=1996 |title=The Rise of Islam and the Bengal Frontier |publisher=University of California Press |isbn=0-520-20507-3 |oclc=26634922 76881262}}</ref> துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல்வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார்.<ref name="D'Costa">{{cite book
|last=D'Costa |first=Jerome|year=1986 |title=Bangladeshey Catholic Mondoli (The Catholic Church in Bangladesh) |publisher=Dhaka: Pratibeshi Prakashani}}</ref> ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.<ref name="baxter">Baxter</ref> சிப்பாய்க் கலகம் எனப்படும், 1857ல் கொடூரக் கலகத்தின் பின், இதன் அதிகாரம் பிரித்தானிய முடியின் கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>Baxter, pp. 30–32</ref> காலனித்துவ ஆட்சியின்போது, தெற்காசியா முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர்.<ref name="sen">{{cite book |last=Sen |first=Amartya |year=1973 |title=Poverty and Famines |publisher=Oxford University Press |isbn=0-19-828463-2 |oclc=10362534 177334002 191827132 31051320 40394309 53621338 63294006}}</ref>
[[File:Lalbager Kella 01.jpg|thumb|லால்பாக் கோட்டை, 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், டாக்காவில் கட்டப்பட்டது.]]
18ம் நூற்றாண்டில் இந்துப் பேரரசான மராத்தியப் பேரரசு, முகலாயர்களைத் தோற்கடித்ததோடு, 1742க்கும் 1751க்கும் இடையில் வங்காளத்தின் நவாப்பின் கீழிருந்த பகுதிகளையும் அழித்தது. நவாபின் ஆட்சியின் கீழிருந்த வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளின் மீதான மராத்தியப் பேரசின் தொடர் தாக்குதல்களால் வங்காளப் பொருளாதாரம் அழிவடைந்தது. இதனால் மராத்தியப் பேரரசின் தொடர்தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியவில்லை. நவாப் அலி வர்தி கான் மராத்தியப் பேரரசுடன் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு முழு ஒரிசாவையும், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளையும், மராத்தியப் பேரரசுக்கு அளித்தான். இதற்கு மேலதிகமாக வங்காளத்தின் ஏனைய பகுதிகளிலும் பீகாரிலும் வசூலிக்கப்படும் வரியில், கால்பங்கை திறையாக(''சௌத்'') அளிக்கவும் ஒப்புக்கொண்டான். இது அண்ணளவாக வருடத்துக்கு, வங்காளத்திலிருந்து 20 லட்சங்களும், பீகாரிலிருந்து 12 லட்சங்களும் ஆகும்.<ref>{{cite book|author=Stewart Gordon |title=The Marathas 1600–1818 |url=http://books.google.com/books?id=iHK-BhVXOU4C&pg=PA133 |accessdate=16 November 2011 |year=1993 |publisher=Cambridge University Press |isbn=978-0-521-26883-7 |pages=133–}}</ref><ref>{{cite book|author=Brijen Kishore Gupta |title=Sirajuddaullah and the East India company, 1756–1757, background to the foundation of British power in India |url=http://books.google.com/books?id=o-MUAAAAIAAJ&pg=PA134 |accessdate=16 November 2011 |year=1966 |publisher=Brill Archive |pages=134– |id=GGKEY:RS7D7HRH8KA}}</ref> பனிபட்டில் முசுலீம் கூட்டுப் படைகளுடனான போரில் மராத்தியப் பேரரசின் தோல்விக்குப்பின் இப்பேரரசு மராத்தியத் தளபதியான மாதோஜி சிந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இவர் மீண்டும் வங்காளம் மீது படையெடுத்தார். 1760களில், வங்காளப் பகுதிகளை ஆக்கிரமித்த பிரித்தானியப் பேரரசு, சௌத் வரியை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் வங்காளம் மீதான மராத்தியரின் படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியில், 1777இலிருந்து 1818 வரை நடைபெற்ற மூன்று ஆங்கில-மராத்தியப் போர்களில் மராத்தியப் பேரரசு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டது.
== மேற்கோள்கள் ==
|