பேச்சு:மலையகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
::://மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் கிடையாது. இக் கட்டுரை கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றியதே.// ஆம்! இதில் எந்த தவறும் இல்லை.
 
:::ஆனால் '''இலங்கையின் இந்தியத் தமிழர்''' எனும் கட்டுரை '''மலையகத் தமிழர்''' எனும் கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டிருப்பதில் தவறானதுதவறு உண்டு. ஏனெனில் மலையகத் தமிழர் எனும் போது இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்களையும், அதனைச் சார்ந்த பிற தொழில்கள் புரிவோரையும், 1983களில் இனவன்முறைகளின் போது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் என வடக்கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோரையும் குறிப்பதாகக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கையின் போர்த்துகீசரின் வருகைக்கு முன்னர் இருந்து தற்போதும் கொழும்பில் தொகை வணிகர்களாகவும், நகை வணிகர்களாகவும் இருப்போர் மலையகத் தமிழர் என அழைக்கப்படுவதில்லை. அவர்களின் பலரின் வாழ்க்கை முறையே வேறுபட்டது. குறிப்பாக தொகை வணிகர்களின் கடைகள் காலை 10:00 முதல் மாலை 6:00 மணியுடன் மூடப்படும் கடைகளாகவே இருக்கும். கிழமையில் சனி கிழமை அறைநேரமும், ஞாயிறும் கடை மூடப்படும். இதில் பலர் சனிக்கிழமை மாலை விமானத்தில் தமிழ்நாடு சென்று திங்கள் காலை மீண்டும் இலங்கை வருவதை வாடிக்கையாக கொண்டோராகவேகொண்டோர் பலர் இருக்கின்றனர். இவர்களில் இலங்கை கடவுச்சீட்டு உள்ளோரும் உளர். இந்திய கடவுச்சீட்டையே கொண்டுள்ளோரும் உளர். இரண்டும் உள்ளோரும் உளர். இரண்டு நாட்டிலும் வீடும் இருக்கும். இவர்களின் இலங்கையின் இருப்பு என்பது வணிகம் சார்ந்ததாகவே உள்ளது. அதில் பலர் இந்தியத் தமிழர் என்றே அடையாளப் படுத்துகின்றனர். இவர்களை எவ்வாறு "மலையகத் தமிழர்" என்று கூறமுடியும்? இவர்களின் கடைகளில் பணிபுரிவோர் மலையகத்தை மையமாகக் கொண்டவர்கள் அதிகம் என்பது வேறுவிடயம்.
 
:::அதேபோன்ற வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தியத் தமிழர் யாழ்ப்பாணத்திலும் உளர். எடுத்துக்காட்டாக நெல்லியடி "பரமசிவன் அரிசி ஆலை" உரிமையாளரைக் குறிப்பிடலாம்.
 
:::நீங்கள் சுட்டிய இணைப்பிலும் [http://www.nichamam.com/2008/06/blog-post_30.html] '''கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.// என்பதனை அவ்வெழுத்தாளர் குறிப்பிடுவதையும் கவனிக்கவும். அதேவேளை //மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும்.// எனும் கூற்றூடாக எழுத்தாளர் தன் கருத்தை முன்வைக்கிறார். இதில் எழுத்தாளரின் அபிலாசை வெளிப்படுகிறது. அவ்வெழுத்தாளரின் விருப்பு '''இந்தியத் தமிழர் என அழைக்கும் அனைவரையும்''' மலையகத் தமிழர் என அழைக்கவேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர் எல்லோரும் மலையத் தமிழர் அல்ல.
 
:::இந்தியத் தமிழர் என தம்மை அடையாளப் படுத்தும் முஸ்லீம்களும் உள்ளனர். எடுத்துக்காட்டு [[கம்பளைதாசன்]] எனும் பெயரை சூட்டிக்கொண்ட சாகுல் ஹமீது போன்றோரும் உளர். இவர்களை எவ்வாறு மலையகத் தமிழர் என அழைக்க முடியும்?
 
:::எனவே '''இந்திய வம்சாவளித் தமிழர்''' என்பதற்கும் '''மலையகத் தமிழர்''' என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டையும் இருவேறு கட்டுரைகளாக தொகுக்கப்பட வேண்டும். முதலில் வழிமாற்றை நீக்குதல் வேண்டும்நீக்கவும்.
 
இலங்கை இந்திய தமிழர்கள் வேறு ( இலங்கையில் இந்தியத் தமிழர் என்று சொல்வது இருநூறு ஆண்டுக்கு முன்பில் இருந்து இன்றுவரை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை குறிக்கும்). இலங்கை மலையகத்தமிழர் வேறு, (இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகவும், வேறு சில அதிகாரிகளாகவும், வியாரபார நோக்கத்துக்காகவும், ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டவர்கள்). இவர்களை மலையாக தமிழர் என்பார்கள்.--சிவம் 19:10, 12 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மலையகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலையகத் தமிழர்" page.