ஆகாய் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vep:Aggejan kirj
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: eo:Libro de Ĥagaj; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Haggai-prophet.jpg|thumb|ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''ஆகாய்''' (''Haggai'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
வரிசை 5:
== பெயர் ==
 
'''ஆகாய்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் חגי (Haggài) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αγγαίος (Aggaíos) என்றும் இலத்தீனில் Aggaeus என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "திருப்பயணம் செய்வோன்" என்று பொருள்.
 
== உள்ளடக்கம் ==
 
கி.மு. 520இல் ஆகாய் இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் அருளிய இறைவாக்குகளின் தொகுப்பாக இத்திருநூல் அமைந்துள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று இசுரயேலர் எருசலேமுக்குத் திரும்பி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஆண்டவரது கோவில் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. அதை விரைவில் மீண்டும் கட்டியெழுப்புமாறு இந்த இறைவாக்குகள் தூண்டுகின்றன. தூய்மையாக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றுள்ள மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.
வரிசை 17:
ஆண்டவருக்குப் புதியதொரு கோவில் கட்டியெழுப்ப வேண்டும் என்று கருதிய மக்கள் தளர்வுற்ற நிலையில், ஆகாய் அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். யூதாவின் ஆளுநர் செருபாபேல், தலைமைக் குரு யோசுவா ஆகியோருக்கும் தூண்டுதல் அளித்து, கோவில் கட்டிட உந்துதல் தந்தார் ஆகாய். கோவில் கட்டும் வேலை கி.மு. 520 செப்டம்பர் மாதம் தொடங்கியது (ஆகாய் 1:15). ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிறைவுற்றது.
 
== ஆகாய் உரைத்த இறைவாக்கு நிறைவேறுதல் ==
 
கோவில் என்பது கடவுளின் உடனிருப்புக்கு அடையாளம். அதுவே மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அமையும். மேலும், எருசலேம் கோவில் கட்டியெழுப்பப்படும்போது கடவுளின் வாக்குறுதிகள் ஒருநாள் நிறைவேறும் என்பதற்கு அடையாளமாக அது திகழும்.
வரிசை 23:
கடவுளின் கோவில் கட்டியெழுப்பப்படும்போது அது வருங்காலத்தில் மெசியா புதியதொரு கோவிலைக் கட்டியெழுப்புவார் என்பதற்கு அடையாளம் என்பது புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடக்கின்றது. இதோ ஒரு சில இடங்கள்:
 
1) கடவுள் வாக்களித்த மீட்பரை ஏற்போர் கடவுளின் கோவில்: 1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 2:20-22. <br />
2) புதிய எருசலேம் கடவுள் உறையும் கோவில்: திருவெளிப்பாடு 21:9-22:5.<br />
3) மெசியா கடவுளின் கோவில்: யோவான் 1:14; 2:19-21.<br />
4) கடவுள் தம் மக்களோடு தங்கியிருப்பார்: மத்தேயு 1:23; உரோமையர் 8:9-10.<br />
5) கடவுளின் மாட்சி மெசியாவில் துலங்கும்: யோவான் 1:14; திருவெளிப்பாடு 21:22-23.
 
== நூலிலிருந்து ஒரு பகுதி ==
 
'''ஆகாய் 1:3-8'''
 
<br />"அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக
<br />ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.
<br />இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில்,
<br />நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?
<br />ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:
<br />'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.
<br />நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு.
<br />நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை.
<br />நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை...'
<br />'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்;
<br />என் இல்லத்தைக் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்;
<br />அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்."
 
== உட்பிரிவுகள் ==
வரிசை 71:
[[cs:Kniha Ageus]]
[[en:Book of Haggai]]
[[eo:Libro de Ĥagaj]]
[[es:Libro de Hageo]]
[[fa:کتاب حجی]]
"https://ta.wikipedia.org/wiki/ஆகாய்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது