இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.
 
<quote>: ''"ஒரு நாள் இரவு கனகராச முதலியாரின் அரண்மணைப் பகுதியில் ஒரு ஒளிப்பிழம்பு தெரிவதை அவதானித்த அக்கிராம மக்கள் முதலியாரின் நெற்போர் தீப்பிடித்து எரிகின்றது எனக்கருதி அவரது அரண்மணையினை நோக்கி ஓடி வந்தனர். ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. இந்த அதிசயத்திற்கான காரணத்தை முதலியாரிடம் வினாவிய போது அவர் சற்று முன் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறி மறைந்து விட்டதாகவும் கூறினார். இது தனக்கும் தன் குடிமக்களுக்கும் அருள்பாலிக்கும் காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானின் அருள் என முதலியார் ஆனந்தமடைந்தார். திருவருள் சித்தத்திற்கு அமையத் தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார்.</quote> "''
 
அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது