பெரும்பெயர் வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பாண்டியன் கருங்கை ஒள்வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். [[இரும்பிடர்த் தலையார்]] என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 3</ref> ஈகைக்கடன் பூண்ட [[கவுரியர்]] வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான்.
 
[[மருந்தில் கூற்றம்]] என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம். <ref>
பொன் ஓடைப் புகர் அணி நுதல்<br />
துன் அருந்திறல் கமழ் கடாஅத்து<br />
எயிறு படையாக எயில் கதவு இடாஅக்<br />
கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின்<br />
பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து<br />
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்<br />
கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி (புறநானூறு 3)</ref>
 
இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பெயர்_வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது