நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ca:Credo
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ro:Crez; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Nicaea icon.jpg|thumb|கிபி 381ல் உருவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையைச் சங்கத் தந்தையர் காட்டுகின்றனர். நடுவில் நிற்பவர் 325இல் நிசேயா சங்கத்தைக் கூட்டிய காண்ஸ்டண்டைன் மன்னர்.]]
 
'''நம்பிக்கை அறிக்கை''' அல்லது '''விசுவாச அறிக்கை''' அல்லது '''விசுவாசப் பிரமாணம்''' (''creed'') என்பது ஒரு சமயக் குழு தான் நம்பி ஏற்கின்ற சமய உண்மைகளை வெளிப்படுத்தவும், அதைச் சமயக் கொண்டாட்டங்களின்போது அறிக்கையிடவும் பயன்படுத்துகின்ற உரைக்கோப்பு ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Creed நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
''நம்புகிறேன்'' ("I believe" ) எனப் பொருள்படுகின்ற "credo" என்னும் சொல் ({{lang-la|[[credo]]}}) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.
{{christianity}}
மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக்கொள்கின்ற [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] மற்றும் [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] ஆகிய இரண்டும் "நம்புகிறேன்" ({{lang-la|[[credo]]}}) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை "அடையாளம்" கண்டுகொள்ள உதவுகின்ற "உரைகல்லாக" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை "symbol" ({{lang-el|σύμβολο[ν]}}, ''sýmbolo[n]'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
இத்தகைய நம்பிக்கை அறிக்கை போதனை அளிக்கும் வகையில், மறுப்புக்குப் பதில் தரும் முறையில் நீளமாக அமையும்போது அதற்கு "நம்பிக்கை உரைக்கூற்று" (confession of faith) என்னும் பெயர் அளிக்கப்படுவதுண்டு. நம்பிக்கை (creed) என்னும் சொல் சில வேளைகளில் "சமயம்", "மதம்", "மறை" (religion) என்று பொருள்படும். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகளும் சில சமயங்களில் "நம்பிக்கை" என்று அழைக்கப்படுவதுண்டு.
 
== சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள் ==
 
கிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச்சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நற்செய்தி|நற்செய்தி நூல்கள்]], [[திருமுகம்|திருமுகங்கள்]] ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு நூல்களின்]] அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் ([[இயேசு கிறித்து]]), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம்.<ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Johnson, Phillip R. "The Nicene Creed."] 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
வரிசை 23:
[[இஸ்லாம்|இசுலாமியரின்]] நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்" ({{lang|ar|لا إله إلا الله محمد رسول الله}} ''({{transl|ar|DIN|lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh}})'' என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.
 
== கிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள் ==
 
நம்பிக்கை அறிக்கை என்னும் கருத்துருவகம் முதன்முதலில் தோன்றியது கிறித்தவ சமயத்தின் பின்னணியில்தான். கிறித்தவத்தில் தோன்றிய சில நம்பிக்கை அறிக்கைகளைக் கீழே காணலாம்:
 
=== கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் ===
 
[[பவுல் (திருத்தூதர்)|புனித பவுல்]] கிறித்து [[இயேசுவின் சிலுவைச் சாவு|இறந்து]] [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்த]] இருபது ஆண்டுகளுக்குள் (கிபி 54-55) [[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில்]] திருச்சபையின் தொடக்க ஆண்டுகளிலேயே கிறித்தவர்கள் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்திய சுருக்கமான நம்பிக்கை அறிக்கையைத் தருகின்றார். இந்நம்பிக்கை அறிக்கை [[கிறித்து]] இறந்த பத்து ஆண்டுகளுக்குள் எருசலேம் கிறித்தவ சமூகத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன் வடிவம் இதோ:
வரிசை 33:
{{cquote|நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார் ([[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:3-7]])}}
 
=== பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை ===
 
இந்நம்பிக்கை அறிக்கை உரோமைத் திருச்சபையில் இரண்டாம் நூற்றாண்டில் [[திருமுழுக்கு|திருமுழுக்குப்]] பெற்றோர் அறிக்கையிட்ட கொள்கை உரைக்கூற்றாக, கேள்வி-பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. இது கிபி 4ஆம் நூற்றாண்டளவில் மூன்று பகுதி கொண்ட அறிக்கையாக உருவெடுத்தது. அது [[மத்தேயு|மத்தேயு 28:19]] பகுதியின் அடிப்படையில் அமைந்தது.
வரிசை 43:
பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை பின்னர் சிறிது விரித்து எழுதப்பட்டு, [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] என்னும் பெயர் பெற்றது.
 
=== நிசேயா நம்பிக்கை அறிக்கை ===
{{Main|நிசேயா நம்பிக்கை அறிக்கை}}
கிபி 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இந்த நம்பிக்கை அறிக்கையை உருவாக்கியது. கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் இறைத்தன்மையும் அவர் ஒரு படைப்புப்பொருள் அல்ல, மாறாகக் கடவுளுக்கு நிகரானவர் என்னும் உண்மையும் இந்த அறிக்கையில் உள்ளது.<ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Kiefer, James E. "The Nicene Creed."] 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
 
=== திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை ===
{{Main|திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை}}
இந்த நம்பிக்கை அறிக்கை கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைகளாலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, திருவழிபாட்டின் போது இது அறிக்கையிடப்படும். கத்தோலிக்க திருச்சபையின் ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது நிசேயா நம்பிக்கை அறிக்கைக்குப் பதிலாக இந்த அறிக்கை பல இடங்களில் அறிக்கையிடப்படுகிறது. இது மறைக்கல்வியிலும் பயன்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]] [[லூதரனியம்|லூதரன் சபை]], [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க சபை]], [[மேற்கு மரபுவழி திருச்சபை]], பிரஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்ட் சபை, காங்க்ரகேஷனலிஸ்டு சபை போன்ற பல கிறித்தவ சபைப்பிரிவுகள் இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்று தம் வழிபாடுகளில் பயன்படுத்துகின்றன.
 
=== கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை ===
{{Main|கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை}}
 
கிபி 451இல் கால்செதோனியா நகரில் நடந்த பொதுச்சங்கத்தில் இந்த நம்பிக்கை அறிக்கை உருவானது. இதில் [[இயேசு கிறித்து]] கடவுளாகவும் மனிதராகவும் உள்ளார் என்னும் உண்மையும் இரு தன்மைகள் இருப்பினும் ஒரே ஆளாக இருக்கிறார் என்னும் உண்மையும் தெளிவாகச் சேர்க்கப்பட்டன.
 
=== அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை ===
{{Main|அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை}}
 
வரிசை 63:
ஆரியுஸ் என்பவர் இயேசு கிறித்து பற்றிக் கூறிய தப்பறைக் கொள்கையை அத்தனாசியுஸ் (கிபி 296/298 - 373) தீவிரமாக எதிர்த்தார். அவரே இந்நம்பிக்கை அறிக்கையை உருவாக்கினார் என்றொரு மரபு உண்டு. ஆனால் அத்தனாசியுஸ் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே அது உருவானது என வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.
 
=== திரெந்து நம்பிக்கை அறிக்கை ===
{{Main|திரெந்து நம்பிக்கை அறிக்கை}}
 
இந்த நம்பிக்கை அறிக்கையில், புரடஸ்தாந்து சீர்திருத்தத்திற்குப் பின் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தம் கொணரக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம் (1545-1563) தொகுத்தளித்த கொள்கை அடங்கியுள்ளது.
 
=== இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை ===
{{Main|இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை}}
 
இப்பெயரில் [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] 1968, சூன் ஆம் நாள் நவீன காலத்துக்கு உரிய ஒரு நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார். உரோமையில் கிறித்தவ சமயம் பரவிட துணைபுரிந்த புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோர் கிறித்துவின் பொருட்டு மறைச்சாட்சிகளாக கிபி 68இல் உயிர்துறந்தனர் என்னும் மரபின்படி 1968ஆம் ஆண்டு அவர்களின் வீர மரணத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு நினைவு கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டத்தின் இறுதியில் திருத்தந்தை ஆறாம் பவுல் "இறைமக்களின் நம்பிக்கை அறிக்கையை" வெளியிட்டார். அதை அறிமுகப்படுத்தும்போது, "இந்த நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கையைச் சிறிது விரித்துக் கூறுவதோடு, நவீன காலத்தின் தேவைக்கேற்ப சில புதிய கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன" என்று கூறினார் <ref>[http://www.vatican.va/holy_father/paul_vi/motu_proprio/documents/hf_p-vi_motu-proprio_19680630_credo_en.html இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
வரிசை 112:
[[pl:Chrześcijańskie wyznania wiary]]
[[pt:Credo]]
[[ro:Crez]]
[[ru:Символ веры]]
[[sl:Veroizpoved]]
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது