மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற [[கிரேக்கர்கிரேக்கம்|கிரேக்க]] [[மெய்யியல்]] அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக இதை [[ஜெரெமி பெந்தாம் என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[நீதித்துறை|நீதியாளர்தான்]]தான் துவக்கத்தில் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.<ref>Rosen, Frederick (2003). ''Classical Utilitarianism from Hume to Mill''. Routledge, pg. 28. ISBN 0-415-22094-7 "It was Hume and Bentham who then reasserted most strongly the Epicurean doctrine concerning utility as the basis of justice."</ref> அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் [[பண்டம்|பண்டமெனக்]] கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "மிகுதியான மகிழ்ச்சிபெருமகிழ்ச்சிக் நெறிகோள்கோட்பாடு" என தனது கோட்பாட்டைகோட்பாட்டைத் திருத்திக் கொண்டார்.