மெய்யப்பர் காரைக்குடியில்[[காரைக்குடி]]யில் வாழும் [[நகரத்தார்|நகரத்துச் செட்டியார்]] குடும்பத்தில், அவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907. அவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை விற்பனை செய்தார். இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர். தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்கலானார். தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.