'''எம்.முகம்மது எச்.ஹுசைன் எம்.முகம்மது அஷ்ரப்''' (MHM Ashraff, [[ஒக்டோபர் 23]], [[1948]] - [[செப்டம்பர் 16]], [[2000]]) [[இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்|இலங்கை முஸ்லிம் காங்கிரசின்]] தாபகத் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை பாராளுமன்றத்தின்]] அங்கத்தவராகவும் துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்.