திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்குநான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். இதன் நூலமைப்பினைப் பொறுத்தமட்டில், இதை இயற்றியவர் 3, 4, 9 என்ற எண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளமை தெரிகிறது. இந்த எண்களுக்கு ஏன் அதன்திருமந்திரத்தின் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், அவை ஏதாவது சித்தாந்தத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா என்பது பற்றி, ஆய்வாளர்கள் ஆராய்ந்து, திடமான முடிவுக்கு இன்றுவரை வரவில்லை. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
 
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது