1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில்மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்துநந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.<ref name="இந்து1">{{cite news | url=http://www.thehindu.com/news/cities/chennai/the-day-mr-radha-shot-mgr/article4229865.ece | title=The day M.R. Radha shot MGR | work=த இந்து | date=2012-12-23 | accessdate=டிசம்பர் 27, 2012 | author=ஏ. சிரீவத்சன் | location=சென்னை}}</ref> இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது [[காது|காதருகே]] சுடப்பட்டார். இராதாவின் [[உடல்|உடலில்]] நெற்றிப் பொட்டிலும் [[தோள்|தோளிலுமாக]] இரு குண்டுகள் பாய்ந்தன. [[மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.