ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==ஆக்கியாழ்வானை வென்றது==
: அக்கால அரசனின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஆக்கியாழ்வான். மகாபாஷ்ய பட்டர் ஆளவந்தாரின் இளமைக்காலக் குரு. இந்தப் பட்டருக்கு அரசனிடமிருந்து ஒரு ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானுக்குக் கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. யமுனைத்துறைவன் அதனை வாங்கிக் கிழித்தெறிந்துவிட்டார். செய்தி அறிந்த அரசன் பல்லாக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துளைவனுக்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் அழகில் மயங்கி, இவர் தோற்கமாட்டார் என்று அரசனிடம் கூறினார். ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.
 
:"நீ எது சொன்னாலும் மறுக்கிறேன். மறுக்க முடியாவிட்டால் நான் தோற்றவன்" என ஆக்கியாழ்வான் அவையில் அறிவித்தார். ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன் "உமது தாய் புத்திரவதி. இந்த அரசன் தர்மவான். அரசபத்தினி பதிவிரதை" என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இந்தக் கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க வேண்டும் என்று அரசி வேண்டினாள். யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.
 
:ஆக்கியாழ்வான் வெறும் வாதத்தில் காலம் கழிப்பவன். வாதமிட்டுக் காலம் கழிப்பவன் நன்மகன் <ref>சர்ப்புத்திரன்</ref> அல்லன். நன்மகனைப் பெறாத தாய் மகனைப் பெற்றவள் <ref>புத்திரவதி</ref> அல்லள்; மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார். அறநெறி அல்லாதவனை <ref>தர்மசாலி அல்லாதவனை</ref> அவைக்களப் புலவனாய்க் கொண்டிருக்கும் அரசன் அறநெறியாளன் <ref>தர்மவான்</ref> அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார். கணவன் கருத்தோடு மாறுபட்டு நிற்கும் மனைவியாகிய அரசி கற்புக்கரசி <ref>பதிவிரதை</ref> அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார்.
 
:அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அதனால் யமுனைத் துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். பின்னர் மணக்கால் நம்பி அருளுரை பெற்று ஆளவந்தார் ஆனார்.
 
==ஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது