முத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சமயம்; added Category:சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''முத்தி''' என்பது வீடுபேறு. சிப்பிக்குள் வழுந்த நீர் இறுகி முத்தாவது போல உடலுக்குள் விழுந்த உயிர் முத்தாகி ஒளிர்வது முத்தி. சமய நூல்கள் இதனை இறைவனடி சேர்தல் எனக் குறிப்பிடுகின்றன.
நான்கு வழிகளில் முத்தி பெறலாம் எனச் சைவநெறி குறிப்பிடுகிறது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005, பக்கம் 167</ref> வழிகளை 'மார்க்கம்' என்பர். இந்த 4 வழிகளுக்கு வடசொற்களால் பெயர்கள் இடப்பட்டுள்ளன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன அவை. ஒழுக்கம், செயல், தவம், மெய்யுணர்தல் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
சரியை என்பது பிறரிடம் நடந்துகொள்ளும் நடத்தை முறைமை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறை, அழுக்காறாமை, வெஃகாமை போன்ற இல்லற நடத்தைகளும், அவாவின்மை போன்ற துறவற நடத்தைகளும் [[திருக்குறள்]] காட்டும் ஒருக்க நெறிகள். இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது ஒரு வழி.
வரிசை 7:
கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைதல் மற்றொரு வழி.
யோகம் என்பது தவம். [[திருமூலர்]] இதனை [[அட்டாங்க யோகம்]] என்று கூறி விளக்குகிறார். <ref>[[திருமந்திரம்]], மூன்றாம் தந்திரம்</ref> இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.
ஞானம் என்பது மெய்யுணர்தல். இது உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே. இறைவனுக்குள்ளே யான், இறைவன் வெளியே. வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்வதால் முத்தி பெறலாம் என்பது வேறொரு வழி.
|