கர்தினால்களின் பதவிக் கேடயத்தின் மேல்பகுதியில் சிவப்பு நிற விரிதொப்பியும், தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.
உரோமை நகருக்கும் தங்கள் சொந்த மறைமாவட்டத்திற்கும் வெளியே தங்கியுள்ள கர்தினால்கள் தாங்கள் தங்கியிருக்கும் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆகவே இவர்களுக்கெதிரானஒரு கர்தினாலுக்கு எதிரான வழக்குகள் திருத்தந்தையினால் மட்டுமே விசாரிக்கப்பட முடியும். ஆயினும் இது இவர்கள் தங்கியிருக்கும் நாடுகளின் அரசியல் சட்டங்களுக்கு பொறுந்தாது. இவர்கள் அந்நாட்டின் அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டவர்களே. திருத்தந்தையினால் அனுமதிக்கப்பட்டால் ஒழியஅன்றி திருச்சபையின் உச்ச நீதிமன்றத்திற்கும் (Roman Rota) கூட இவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உரிமை இல்லை. இவ்வகை வழக்குகளை விசாரிக்க பொதுவாக திருத்தந்தை உரோமைச் செயலக தலைவர்களைக்கொண்ட ஒரு குழுவினை அமைத்து விசாரிப்பார். இக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் திருத்தந்தை தீர்ப்பு வழங்குவார்.