இசுருமுனிய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==வரலாறு==
இக்கோயில் பண்டைக்காலத்தில் இலங்கையை ஆண்ட தேவாநாம்பிய தீசன் என்னும் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. 500 உயர் சாதிப் பிள்ளைகளை பிக்குகளாக நிலைப்படுத்திய பின்னர், அனர்கள் வசிப்பதற்காக இது கட்டப்பட்டது. மன்னன் முதலாம் கசியபன் (கிபி 473-491) இதைத் திருத்திய பின்னர் "போபுல்வன் கசுப்கிரி ரத்மகா விகாரை" எனப் பெயர் இட்டான். மன்னனுடைய பெயரையும் அவனது இரு பெண் மக்களுடைய பெயரையும் இணைத்து இப்பெயர் உருவானது. அங்கிருந்த குகையுடன் தொடர்புடையதாக விகாரையும், மேலே மலை உச்சியில் ஒரு சிறிய தாதுகோபுரமும் உள்ளன. இத் தாதுகோபுரம் தற்காலக் கட்டுமான அமைப்புடையது. இங்கு குளம் ஒன்றில் இருந்து வெளிவருவது போல் அமைந்துள்ள ஒர் பாறையில் யானைகள், குதிரை ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன. இவ்விடத்திலேயே புகழ் பெற்ற இசுருமுனிய காதலர்கள் எனப் பெயருடைய சிற்பமும் உள்ளது. இச் சிற்பத்தைக் கொண்ட கற்பலகை வேறொரு இடத்திலிருந்து இவ்விடத்துக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விகாரைக்கு அண்மையிலேயே [[ரன்முசு உயன]] எனப்படும் [[பூங்காவனம்]] உள்ளது.
 
==தொல்லியற் பொருட்கள்==
===இசுருமுனிய காதலர்கள்==
6ம் நூற்றாண்டுக் குப்தர் பாணியில் இச் சிற்பம் அமைந்ததுள்ளது. காதலனின் மடியில் அமர்ந்திருக்கும் காதலி எச்சரிக்கை செய்யயும் பாங்கில் ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறாள். இது நாணத்தினால் காதலனைத் தடுப்பதற்கான ஒரு சைகையாக இருக்கலாம். இதில் உள்ளவர்கள் துட்டகைமுனுவின் மகனான சாஅலிய என்பவனும், அவனது தாழ்ந்த சாதிக் காதலியான அசோகமாலா என்பவளும் எனக் கருதப்படுகிறது. அசோகமாலாவுக்காக சாலிய தனது அரசுரிமையைத் துறந்தான்.
 
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுருமுனிய" இலிருந்து மீள்விக்கப்பட்டது