துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''துரியோதனன்''' [[மகாபாரதம்]] கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் [[கௌரவர்]]களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை [[கர்ணன்]] உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனதும்]], [[காந்தாரி]]யினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.
==பிறப்பு==
திருதராஷ்டிரனுன் மனைவி காந்தாரி வெகு காலம் கர்ப்பமாக இருந்தாள். அவள் பிரசவிப்பதற்கு முன்பே பாண்டுவின் மனைவி குந்தி யுதிஷ்டிரனை பெற்றதால், ஆத்திரமுற்று தனது வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதனால் அவளது வயிற்றில் (கர்ப்பத்தில்) இருந்து ஒரு சதைப்பிண்டம் வந்து வெளியே விழுந்தது. இதைக் கண்ட காந்தாரி அதிர்ச்சியடைந்தாள். வியாசரை அழைத்தாள். அவர், அந்த சதைப்பிண்டத்தை நூற்றொரு துண்டகளாக அறிந்து வெண்ணெய் குடத்தில் போட்டு மூடி வைத்து ஒரு வருடத்திற்கு மண்ணில் புதைத்து வைத்தார். வருட முடிவில், முதல் பானை திறக்கப்பட்டது, அதிலிருந்து துரியோதனன் உதித்தான்.<ref>http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm</ref>
முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். பலர், அவனது துர் நடத்தைகளாலேயே அவனுக்கு அந்தப் பெயர் வந்ததாகத் தவறாக நினைக்கின்றன. அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.
{{மகாபாரதம்}}
|