துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். பலர், அவனது துர் நடத்தைகளாலேயே அவனுக்கு அந்தப் பெயர் வந்ததாகத் தவறாக நினைக்கின்றன. அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.
===Development===
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. பீமனுக்கு அடுத்தபடியாக அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக துட்சாசனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர் மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் அவன் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமனிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான்.
==குடும்பம்==
துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் பகதத்தனின் புதல்வியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். லட்சுமணா கிருஷ்ணனின் மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள். லட்சுமணகுமாரன் குருக்ஷேத்திர யுத்த 13ம் நாளில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்.
==பாத்திரம்==
மகாபாரதக் கதையின் பிரதான வில்லன் துரியோதனன்.
{{மகாபாரதம்}}
|