புதைகுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
பொதுவாக இக்குழிகள் அடிநிலப்பாறை அரிக்கப்படுவதால் உருவாகிறது. புவிமேற்பரப்பிலிருந்து ஊருகின்ற நீர் அடியில் சென்று அங்குள்ள சுண்ணாம்புக்கல் போன்ற எளிதில் கரையக் கூடிய அடிநிலப்பாறைகளைக் கரைக்கிறது. இவ்வடிநிலப்பாறைகள் கரைவதனால் குகை போன்ற இடைவெளி நிலத்தின் கீழடுக்குகளில் உருவாகும். இந்த இடைவெளி படிப்படியாக வளர்ந்து பெரிதாகிறது. இந்த இடைவெளிக்கு மேலே உள்ள நிலமானது தனது எடையையும் அதன் மேலே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் கணத்தையும் தாங்கமுடியாத நிலை வரும்போது, மேலடுக்கு நிலம் சரிந்து அடியில் உருவான இடைவெளியை நிரப்புகிறது. இதனால் புவிமேற்பரப்பில் பள்ளம் (அ) புதைகுழி உருவாகிறது. இந்நிகழ்ச்சி திடீரென்றும் படிப்படியாகவும் ஏற்படலாம்.<br />
 
மேற்கூறப்பட்ட செயல்முறையானது, நிலத்தடிநீர் அரிப்பினாலும் ஏற்படலாம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதனால் உருவாகும் இடைவெளியினாலும் ஏற்படலாம்.<br />
பெரும்பாலும் இக்குழிகள் உருவாகும் போது அதன் அடியில் உள்ள குகை (அ) இடைவெளி மேலே தெரியாது. ஆனால், பபுவா நியு கினியாவிலுள்ள மின்யே புதைகுழி (''Minyé sinkhole''), கென்டகியில் உள்ள செடார் புதைகுழி (''Cedar Sink'') போன்ற பெரிய குழிகளில் நிலத்தடி நீரோட்டம் புதைகுழிக்கு அடியில் கண்ணுகு புலப்படும் வகையில் அமைந்துள்ளது.<br />
கார்பனேட் பாறைகளை அடிநிலப்பாறைகளாகக் கொண்ட இடங்களில் இப்புதைகுழிகள் பரவலாகக் காணப்படுகிறது.<br />
 
இக்குழிகள் மனித செயல்பாடுகளால்கூட ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இலூசியானா போன்ற இடங்களில் கனிமச் சுரங்கங்கள் இடிவதனால் குழிகள் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களில் நிலத்தடியில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் மற்றும் பாதாளசாக்கடைக் குழாய்கள் உடைவதனால் குழிகள் ஏற்படுகிறது. நிலத்தடிநீரை அதிகமாக சுரண்டுவதனாலும், இயற்கையான ஆற்று நீரோட்டத்தை மாற்றுவதனாலும், தொழிற்ச்சாலை நீர்தேக்கங்கள் கட்டுவதனாலும் மேற்பரப்பு நில அடுக்கு எடை மிகுந்து தாங்குவதற்கு அடிநிலப்பாறைகள் இல்லாததால் குழிகள் உருவாகலாம்.<br />
 
 
==நிகழும் இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புதைகுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது