சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{
{{சேரர்கள் வரலாறு}}
'''உதியஞ்சேரலாதன்''' கி.பி. முதல் நூற்றாண்டில் [[குட்டநாடு|குட்டநாட்டை]]ஆண்ட [[சேரர்|சேர]] அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்|இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும்]] [[பல்யானைச் எல்கெழு குட்டுவன்|பல்யானைச் எல்கெழு குட்டுவனும்]] ஆவர்<ref>சு. இரத்தினசாமி, ''சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி)'', மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.</ref>. [[சங்ககாலம்|சங்ககாலப்]] புலவர் [[மாமூலர்]] [[அகநானூறு|அகநானூற்றில்]] (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் [[கரிகாலன்|கரிகாலனுடன்]] [[வெண்ணிப்பறந்தலை]] என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், [[வெண்னிகுயத்தியார்]], [[கழாத்தலையார்]] ஆகியோர் கூறுகின்றனர்.
==மேற்கோள்கள்==
<References />
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
|