தமிழ்நாடு காவல்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழக அரசு சார்ந்த அமைப்பு.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ''தமிழ்நாடு காவல்துறை'' சுமார் 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். இத...
(வேறுபாடு ஏதுமில்லை)

14:43, 4 மே 2007 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு காவல்துறை சுமார் 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். இது குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் செயல்படுகிறது.

துறை அமைப்பு

தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 80,977 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு என மொத்தம் 4 காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

தமிழகம் 30 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர்(Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

  • ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  • பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  • பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  • கடலோர காவல் துறை (Coastal Security Group)
  • குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  • பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  • செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
  • இரயில்வே காவல்துறை (Railways)
  • சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  • சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)


தமிழகத்தில் குற்றங்கள்

தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.


காவல்துறையில் பெண்கள்

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா முதல்வராக (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன.

பின்னர் செல்வி. ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

காவலர் பயிற்சிக் கல்லூரி

காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

ஆதாரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_காவல்துறை&oldid=138523" இலிருந்து மீள்விக்கப்பட்டது