கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நாமக்கல் மாவட்டம், கொல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலை தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. சங்கஇலக்கியங்களில் சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவன் வல்வில்ஓரி. இந்த வில்லில் வல்லமை பொருந்திய ஓரி மன்னரால் ஆளப்பட்ட மலை தான் இந்த கொல்லிமலை. அவனுடைய வில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது அதே சங்க இலக்கியம் தான்.
கொல்லிக் குடவரையில் இருந்த [[பாவை]]யைக் 'கொல்லிப்பாவை' என்றனர்.
==பரணர் முதலானோர்==
கொல்லிப்பாவை பற்றிய செய்திகளைப் [[பரணர்]] தம் அகத்திணைப் பாடல்களில் தந்துள்ளார். இதுபற்றி மேலும் செய்திகளைத் தரும் பாடல்களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை.
 
இந்த கொல்லிமலை என்ற பெயர் கொல்லிபாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது தான். அந்த பகுதி மக்களால் எட்டுக்கைஅம்மன் எனவும், எட்டுக்கை காளி எனவும் அழைக்கப்படும் இந்த தெய்வம் ஓர் பெருநிலையான தெய்வம் ஆகும். திராவிட கடவுள் மட்டுமின்றி, குமரி கண்டத்துடனும் தொடர்புடைய கடவுள் இது.
==ஓவியம்==
இந்தப் பாவை எழுதப்பட்ட ஓர் ஓவியம். இது கொல்லிமலையிலிருந்த ஒரு குடவரையில் எழுதப்பட்டிருந்தது. பொம்மை உருவம் செய்தலையும் சங்ககாலத்தில் எழுதுதல் என்றனர். இந்த வகையில் கொல்லிப்பாவை ஒரு சிலை எனவும் தெரிகிறது.
 
இந்த பாவைக்கென்று இன்றுவரை ஒரு கோவில் மட்டும் தான் உள்ளது. சிலர் இந்த பாவையை சிறு தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.
==உருவம்==
:பாடல்களில் வரும் தொடர்கள் தெய்வத்தாலோ, பூதத்தாலோ, கடவுளாலோ எழுதப்பட்டது இந்தப் பாவை என்று கொள்ளும்படியும் அமைந்துள்ளது.
===தெய்வ உருவம்===
தலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம். - பரணர் - குறுந்தொகை 89\1562,<br />
தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் – நற்றிணை 185
===பூத உருவம்===
கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ – நற்றிணை 192\ 2339
===கடவுள் உருவம்===
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். - பரணர் – அகம் 22\1524,
===இயற்கையில் அமைந்த பொம்மை===
குடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம். - பரணர் – நற்றிணை 201\1575
ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198
 
[[பகுப்பு:சங்க காலக் கலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது