அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி தமிழாக்கத்திருத்தங்கள் சில
வரிசை 1:
'''அப்பய்யஅப்பைய தீட்சிதர்''' (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த [[அத்வைதம் |அத்வைத]] வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் [[இலக்கியம்|இலக்கியத்திலும்]] வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் [[காசி]] வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான [[கருமம்]], [[பக்தி]], [[ஞானம்]] இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.
 
==பரந்த நோக்கு==
வரிசை 7:
==104 நூல்களை இயற்றியவர்==
 
அப்பய்யஅப்பைய தீக்ஷிதர்தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் <ref>[http://www.shaivam.org/adappayya_works.htm]</ref> எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது.
 
==எதிர்மறைத் தத்துவங்களிலும் வல்லவர்==
வரிசை 19:
==''சித்தாந்தலேச சங்கிரகம்''==
 
அப்பைய்யஅப்பைய தீக்ஷிதரின்தீட்சிதரின் வேதாந்த நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ''சித்தாந்த-லேச-சங்கிரகம்'' என்ற அவருடைய சொந்தப் படைப்பு. இப்பெரிய நூலில் அத்வைத சித்தாந்தத்தின் எல்லா நெளிவு சுளுவுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறார். பாஷ்யங்களைப் படிக்கத் தொடங்கும் அத்வைத மாணவர்கள் யாவரும் இன்று இந்நூலில் தான் தொடங்குவார்கள். அத்வைதத்தினுள்ளே இருக்கும் பல பிரிவுகளின் கொள்கைகளும் இதனில் அலசப்பட்டு விடுகின்றன. ஏக-ஜீவ-வாதம், நாநாஜீவ-வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்துவ-வாதம் முதலிய எல்லாமே விவரிக்கப்பட்டு அவைகளின் எதிர்வாதங்களும் தீக்ஷிதரின்தீட்சிதரின் அறிவுச் சாணையில் தீட்டப்பட்டு விடுகின்றன. அகிலமும் சம்மதம் என்பது போல் அவரே அந்த பரந்த நோக்கை நியாயப்படுத்தி விடுகிறார்: “உலகெல்லாம் மாயை என்பதை எல்லா அத்வைதிகளும் ஒப்புக்கொள்வதால், அம்மாய உலகத்திற்கு இவர்கள் வெவ்வேறு படங்கள் வரைவதினால் என்ன குறை வந்துவிடப் போகிறது?”
 
==''பரிமளம்''==
 
[[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரின்]] பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு [[வாசஸ்பதி மிசிரர்]] இயற்றிய ‘[[பாமதி]]’ என்ற உரை மிகவும் மதிக்கத் தக்கது. அதற்கு அமலானந்தர் என்பவர் ''கல்பதரு'' என்ற ஓர் நிரடலான உரை எழுதினார். இந்த கல்பதருவை எளிதாகப் புரிந்துகொள்ளும் முறையில் அப்பய்யஅப்பைய தீக்ஷிதர்தீட்சிதர் எழுதிய ''பரிமளம்'' என்ற உரை பல்வேறு ஐயங்களை ஒருவாறு மிதப்படுத்தியது. மனிதனுடைய அஞ்ஞானம் [[பிரம்மம்|பிரம்ம]]த்திலிருந்து வந்ததா அல்லது ஜீவனிடமிருந்து வந்ததா என்பது அத்வைதத்தின் சிடுக்கான பிரச்சினை. இதற்கு ‘பாமதி’ உரையில் கொடுக்கப்பட்ட விளக்கமும், அத்வைதத்தின் இன்னொரு பிரிவான [[விவரணப்]] பிரிவில் கொடுக்கும் விளக்கமும் இரண்டையும் கருத்தில் கொண்டு அப்பய்யஅப்பைய தீக்ஷிதர்தீட்சிதர் இரண்டு விளக்கமும் சம்மதமே என்ற முறையில் அவருடைய ''சித்தாந்த லேச சங்கிரகம்'' விளக்கியிருந்ததால், அவரது ''பரிமளம்'' பரிமளித்தது.
 
==''சிவார்க்கமணி தீபிகை''==
 
''பரிமளம்'' அத்வைதத்தை அடிப்படையாககொண்டு எழுதப்பட்டது. ஸ்ரீகண்டரின் [[சிவ-விசிஷ்டாத்வைதத்தை]] ஒட்டி ''சிவார்க்கமணி தீபிகை'' என்ற இன்னொரு உரையையும் எழுதினார். இதுவும் பிரம்மசூத்திரத்திற்கு உரையாக எழுதப்பட்டதுதான். இதுவும் பரிமளமும் தான் அவருடைய மிகப்பெரிய உயரிய நூல்கள். சிவார்க்கமணி தீபிகையைக் கற்பதற்காக 500 மாணவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்ய மான்யம் வழங்கியவர் [[வேலூர்]] அரசர் [[சின்ன பொம்ம நாயக்கர்]]. வைஷ்ணவ எதிர்ப்புகளை நாடெங்கும் சந்திப்பதற்காகவே இம்மாணவர்களை ஒன்று சேர்த்தவர் தீக்ஷிதர்தீட்சிதர்.
 
==அத்வைதமும் மற்ற வேதாந்தப்பிரிவுகளும்==
 
வைணவ எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக அவர் முழு மூச்சுடன் பலஆண்டுகள் நாடெங்கும் சென்று பேசியும் எழுதியும் உழைத்தார். பல அரசர்கள் – குறிப்பாக, [[தஞ்சை]], [[வெங்கடகிரி]], வேலூர், [[விஜயநகரம்]] மன்னர்கள் – அவருக்கு உதவி செய்தார்கள். தீக்ஷிதருடையதீட்சிதருடைய கணிப்பில் [[துவைதம்]] முதல் படி. விசிஷ்டாத்வைதம் அதற்கு அடுத்த மேல் படி. சிவாத்வைதமும் அத்வைதமும் கிட்டத்தட்ட ஒன்றாக அதற்கடுத்த கடைசிப்படி. சிவாத்வைதத்தை அடிப்படையாக வைத்து சூத்திரங்களுக்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீகண்டர் ஆதி சங்கரருடைய கருத்துகளுக்கு இணையாக இருக்கும்படிதான் எழுதியிருக்கிறர் என்பது தீக்ஷிதருடையதீட்சிதருடைய முடிவு. குணங்களுடன் கூடிய பரமனை உபாசிப்பது குணங்களற்ற பரம்பொருளில் தான் கொண்டுவிடும். இதை நிலைநாட்டும் முறையில் ''ஆனந்தலஹரி சந்திரிகா'' என்ற நூலில் பற்பல வித்தியாசமான தத்துவங்களும் கடைசியில் சுத்தாத்வைதத்தை அணுகித்தான் முடியும் என்று நிறுவுகிறார்.
 
==பெரிய யோகி==
 
தீக்ஷிதருடையதீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, அவர் ஒரு துண்டின்மேல் அந்த வலியை தன் மந்திர சக்தியால்வலுவால் இழுத்துஈர்த்து வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அப்பொழுது அத்துண்டு இப்ப்டியும் அப்படியும் குதித்துக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் திரும்ப அந்த வலியை வாங்கிக் கொள்வாராம். [[தொல்வினை]]யை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதை நம்பினவர் அவர்.
 
==''ஆத்மார்ப்பண ஸ்துதி''==
"https://ta.wikipedia.org/wiki/அப்பைய_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது