அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன
வரிசை 1:
நாம் அடியெடுத்து நடந்து ஓர் இடத்தை அடைகிறோம். அதுபோலப் பாட்டு அடியெடுத்து நடந்து ஒரு பொருளைத் தரும். நாம் நடக்கும் தப்படிகள் நீண்டும் குறைந்தும் இருக்கும். அதுபோலப் பாட்டின் அடிகளும் இருக்கும்.
 
==எழுத்தெண்ணிக்கை அளவுகோல்==
தொல்காப்பியம் ஒவ்வோர் அடியிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளது. அவற்றை 17 வகையான நிலம் எனக் குறிப்பிடுகிறது.
*எழுத்தெண்ணும் மரபு
:அடியில் உள்ள எழுத்துக்களை எண்ணும்போது [[ஒற்று]], [[ஆய்தம்]], [[குற்றியலிகரம்]], [[குற்றியலுகரம்]] ஆகிய எழுத்துக்கள் எண்ணப்படுவதில்லை.
 
===17 நில அடிகள்===
 
====குறளடி====
குறளடி 4 முதல் 6 எழுத்துக்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுகள்:<ref>
நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து<br />
ஏறிய நிலத்தே [[குறளடி]] என்ப. [[தொல்காப்பியம்]] [[செய்யுளியல்]] 35</ref>
;4 எழுத்து அடி
தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து<br />
வரி 27 ⟶ 30:
====சிந்தடி====
7 முதல் 9 எழுத்துக்கள் கொண்டது சிந்தடி.<ref>
ஏழ் [[எழுத்து]] என்ப சிந்தடிக்கு[[சிந்தடி]]க்கு அளவே<br />
ஈர் [[எழுத்து]] ஏற்றம் அவ் வழியான. தொல்காப்பியம் செய்யுளியல் 36</ref>
;7 எழுத்து அடி
போது சாந்தம் பொற்ப வேந்தி<br />
ஆதி நாதர் சேர்வோர்<br />
சோதி வானம் துன்னு வாரே. <ref>[[யாப்பருங்க விருத்தி]], மேற்கோள். பக்கம் 799</ref>
;இந்தப் பாடலில் உள்ள முதலடி 7 எழுத்துக்களைக் கொண்டது.
*8 எழுத்து அடி
வரி 39 ⟶ 42:
ஒளிபெரிது சிறந்தன் றளியவென் நெஞ்சே
:இந்தப் பாடலில் உள்ள முதலடி 8 எழுத்துக்களைக் கொண்டது.
'''9 எழுத்து அடி''' - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி <ref>[[குறுந்தொகை]] 2</ref>
 
====நேரடி====
10 முதல் 14 எழுத்து அமைந்த அடி நேரடி<ref>
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே<br />
ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. [[தொல்காப்பியம்]] [[செய்யுளியல்]] 37</ref>
*10 எழுத்து அடி - காமம் செப்பாது கண்டது மொழிமோ <ref>[[குறுந்தொகை]] 2</ref>
*11 எழுத்து அடி - தாமரை புரையும் காமர் சேவடி <ref>[[குறுந்தொகை]] கடவுள் வாழ்த்து</ref>
வரி 52 ⟶ 55:
 
====நெடிலடி====
15 முதல் 17 எழுத்து அமைந்த அடி [[நெடிலடி]] <ref>
மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே<br />
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. [[தொல்காப்பியம்]] [[செய்யுளியல்]] 38</ref>
*15 எழுத்து அடி - ஏற்றுவலன் உயரிய எருமருள் அவிர்சடை <ref>புறம்[[புறநானூறு]] 56</ref>
*16 எழுத்து அடி - விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் <ref>[[குறுந்தொகை]] 101</ref>
*17 எழுத்து அடி - தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம் <ref>[[மதுரைக்காஞ்சி]] 3</ref>
 
====கழிநெடில் அடி====
18 முதல் 20 எழுத்து அமைந்த அடிகளைக் கொண்டது [[கழிநெடிலடி]].<ref>
மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே<br />
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. [[தொல்காப்பியம்]] [[செய்யுளியல்]] 39</ref>
;எடுத்துக்காட்டுகள்
*18 எழுத்து - கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் <ref>புறம்[[புறநானூறு]] 55</ref>
*19 எழுத்து - நெடுங்கொடிய நிமிர்தேரும் நஞ்சுடைய புகல்மறவரும் <ref>புறம்[[புறநானூறு]] 55</ref>
*20 எழுத்து - அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின் <ref>புறம்[[புறநானூறு]] 167</ref>
 
==சீர் எண்ணிக்கை அளவுகோல்==
[[அமுதசாகரர்]] எனவும், [[அமிர்தசாகரர்]] எனவும் குறிப்பிடப்படும் [[ஆசிரியர்]] (காலம் 1070-1120) தமது [[யாப்பருங்கலம்]], [[யாப்பருங்கலக் காரிகை]] ஆகிய நூல்களில் ஒவ்வோர் அடியிலும் அமந்துள்ள சீர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். இவரே தாம் முதலில் எழுதிய [[அமுதசாகரம்]] என்னும் யாப்பிலக்கண நூலில் தொல்காப்பியத்தை நெறியில் பாடல் அடி ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களின் அளவுகோலாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.
 
==அடிக்குறிப்பு==