"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த [[தாய்மொழி|தாய்மொழியே]] தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று [[தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம்|ஆட்சிமொழிச் சட்டம்]] இயற்றப்பட்டது27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.<ref>{{cite web | url=http://tamilvalarchithurai.org/a/about-us | title=தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம் | publisher=தமிழ்நாடு அரசு வலைத்தளம் | accessdate=ஏப்ரல் 18, 2013}}</ref>அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் [[தமிழ் வளர்ச்சித் துறை]] மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன."<ref>[http://www.tn.gov.in/tamiltngov/policynotes/pdf/tamil_t.pdf தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை] </ref>