'''குரவைக்கூத்து''' என்பது கூத்தின் ஒரு வகையாகும். இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு இன்றுவரை வழக்கிலுள்ளது.<ref>முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள்: பதிப்பும் ஆண்டும் தெரியவில்லைதெரியவில்லைpak. 73-77</ref> போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போகாகவும் குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்தது. குரவைக் கூத்தினை 'மலை நடனம்' என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. தொடக்கக் காலத்தில் மக்களின் பொழுது போக்காகக் கூத்து விளங்கியது. காலப்போக்கில் கருத்துகளின் அடிபடையில் ஆடப்பெறும் கூத்தாக உருப்பெற்றது எனலாம். குரவைக் கூத்திற்கு தெற்றியாடல் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது.<ref> கா. சு. பிள்ளை, பண்டை விளையாட்டுகள்: கட்டுரை: மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர்.</ref>