வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அம்பையின் சபதம்: *உரை திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அம்பையின் சபதம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 6:
 
===அம்பையின் சபதம்===
தம்பி விசித்திர வீரியனுக்காக காசி மன்னனின் மூன்று அரசகுமாரிகளை,சுயவரத்தின் போது கவர்ந்து வந்தார்.அப்போது அம்பா மட்டும் சல்வன் என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து,அவளை சல்வனிடம் அனுப்பிவைத்தார்.சல்வன் அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் அம்பை பீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்கவேண்டினாள்.பீஷ்மரோ தான் செய்துள்ள சபதத்தைக் கூறி எற்க மறுத்துவிட்டார்.நான் எந்தப்பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், சல்வனோ,விசித்ரவீர்யனோ உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம் என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றி தேடினாள்,எல்லா சத்திரியர்களும் பீஷ்மருக்காக பயந்தார்கள். அவள் இறுதியில் பரசுராமனின் உதவியை நாடினாள்,அவர் பீஷ்மரின் குரு.அம்பையின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன பரசுராமர் தனது சீடருடன் சண்டையிட்டார்,சண்டை பல நாட்கள்,மாதம் என நீடித்தது.இறுதியில் பரசுராமர் பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது,அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் பொல்லவும் முடியாது சண்டையை தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று பரசுராமன் சண்டையை நிறுத்தினார்.குழம்பிப்போன அம்பை பீஷ்மரை கொல்ல தேவர்கள் வழி நான் ஊண்,உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவம் இருந்தாள். சவன் அவள் முன் போன்றி நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில் என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய அம்பை தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ஊர்வசி,கங்கை,சத்தியவதி போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் அம்பை வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர். <ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது