'''திரிசடை''' என்பவள் இராமாயணத்தில் வரும் [[விபீஷணன்|விபீடணனின்]] மகளாவாள். இவள் [[சீதை]] இராவணனால் சிறிப்பிடிக்கப்பட்டசிறைப்பிடிக்கப்பட்ட போது ஆறுதல் கூறியவள். [[இராவணன்]] சீதையை அசோக வனத்தில் சிறை வைத்து விட்டு கூடவே திரிசடையை காவலுக்கு விட்டுச் சென்றான். தினசரி பகலில் வந்து ஆறுதல் கூறி அன்பு பேசிய திரிசடை சீதைக்கு தோழி ஆனாள். வனவாசத்தின் முடிவாக ஒரு மாத காலமே இருந்தபொழுது அனுமன் அங்கு வந்தார். அப்போது திரிசடை தனது கனவைக் கூறி சீதையை ஆறுதல் செய்துகொன்டிருந்தாள்.<ref> என். நாராயணராவ், இதிகாச தேவதைகள், வானதி பதிப்பகம். 2013, பக் 41-43 </ref>