தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அடந்துள்ளஅமைந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்டியர் காப்பதால் தங்களை தென்புலங் காவலர் எனக் கூறிக்கொண்டனர்.<ref>தென்புலங் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - [[புறநானூறு]] 71</ref> இந்த தென்னாட்டை ஆண்ட பாண்டியர்களில் ஒருவனான [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான். <ref>அகநானூறு 209</ref> கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.