'''சமணர் கழுவேற்றம்''' அல்லது '''சமணர் கழுவேறியது''' <ref>எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்</ref><ref>தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754</ref> என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் மதுரை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரிடம்]] வாதத்தில் தோற்று கழுவேறிய நிகழ்வாகும். திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள [[சாமணத்தம்]] என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.