மத்வர் (இயற்பெயர்: '''வாசுதேவர்''') [கர்னாடகா] மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகக்ஷேத்ரம் என்ற கிராமத்தில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையைத்வாழ்க்கையை துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்குக்அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் '''பூர்ணப் பிரஞ்ஞர்'''. மிகவும் படித்த அறிவாளி, துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சுமச்சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். [[அநுமன்]], [[பீமன்]] இவர்களுக்குப்இவர்களுக்கு பிறகு [[வாயு தேவன்|வாயு தேவனின்]] அவதாரமாக உதித்தவராகக் கருதப்பட்டார். அதனால் அவருக்கு '''முக்கியப் பிராணன்''' என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் தன்னை '''ஆனந்ததீர்த்தர்''' என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரே.