சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகழ்வு: *உரை திருத்தம்*
வரிசை 8:
மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று [[திருஞான சம்பந்தர்]] பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக் கோபம் [[வெப்பு நோய்|வெப்பு நோயாக]] பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.
 
பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் [[திருநீர்|திருநீற்றை]] தந்து மன்னின் நோயை குணமாக்கினார். மன்னன் தாய் மதமான சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.
 
[[அனல் வாதம்]] எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களில் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்மந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. அதனையடுத்து [[புனல் வாதம்]] எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தாங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள். அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. திருஞான சம்மந்தர் வென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது