ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் திருப்பருப்பதம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்த...
வரிசை 1:
'''திருப்பருப்பதம்''' (ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நந்திதேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
[[Image:Srisailam-temple-entrance.jpg|thumb|250px|மல்லிகார்ஜுனர் கோயில் வாயில் கோபுரம்]]
'''மல்லிகார்ஜுனர் கோயில், குர்நூல்''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தைச் சேர்ந்த [[குர்நூல்]] மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது [[ஹைதராபாத்]] நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் [[கிருஷ்ணா நதி]]யின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
==தோற்றம்==
இக் கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீ சைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [[கந்த புராணம்|கந்த புராணத்தில்]] சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் [[நாயனார்|நாயன்மார்]]கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். [[ஆதிசங்கரர்]] இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது [[சிவானந்த லகரி]] என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
 
 
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசைலம்_மல்லிகார்ஜுனர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது