[[மதுரை|மதுரையில்]] சித்திரைத் திருவிழா [[சைவம்|சைவத்]] திருவிழா, [[வைணவம்|வைணவத்]] திருவிழா என சமயங்கள் தொடர்புடையதாகவே மீனாட்சி [[சிவன்|சுந்தரேசுவரர்]] திருக்கல்யாணமும், [[அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)|அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும்திருவிழா]]வும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே [[திருமலை நாயக்கர்|மன்னர் திருமலை நாயக்கர்]] காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரு விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் [[வைகை]] ஆற்றில் இறங்கி வந்த அழகர் ஆற்றில் இறங்கும் விழா, மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.<ref>டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்: 187.</ref>