'''கோவூர் கிழார், நான்கு சோழ மன்னர்களின் காலத்தில் வாழ்ந்தவர்'''
•* சோழன் நலங்கிள்ளியைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 31, 32, 33, 302 மற்றும் 400) உள்ளன.
•* சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386) உள்ளன.
•* சோழன் நலங்கிள்ளியின் தம்பி “மாவளத்தான்” ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைந்த்ருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 44) உள்ளன.
•* சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியாது என ஒரு பாடலும் (புறம் 46) உள்ளன்.
•* சோழன் குளமுற்றத்து துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யாணைக் கால்களால் இடறி கொல்ல இருக்கையில், கோவூர் கிழார் தடுத்துப் பாடி உய்யக்கொண்டது என ஒரு பாடலும் (புறம் 46).
•* சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்த்த்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியை பாடி, இளந்த்த்தனை உய்யக்கொண்டது என ஒரு பாடல் (புறம் 47).
•* சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனை கருவூரெறிந்தானைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 373) உள்ளது.
இந்த ஐந்து பாடல்களும் தனித்தனி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளது. (முற்றுதல் எனில் முற்றுகையிடல், துஞ்சுதல் எனில் போர்களத்தில் வீரமரணம் அடைதல், எறிதல் எனில் கைப்பற்றுதல் என்று பொருள்.
'''கோவூர் கிழார் காலத்திய சமகால புலவர்கள்'''
•* கோவூர் கிழாரால் பாடப்பட்ட சோழன் மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் பாடியிருக்கிறார். (புறம் 43)
•* சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும் மற்றும் ஆலத்தூர் கிழாரும் பாடி உள்ளனர்.
•* சோழன் குள முற்றத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் உட்பட ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர்.
|