முதுசொம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
==முதுசொமும் தேசவழமையும்==
{{main|முதுசொம் (தேசவழமை)}}
இலங்கையின் வட பகுதியின் மரபுவழிச் சட்டமான [[தேசவழமைச் சட்டம்|தேசவழமை]], திருமணத்தின்போது கணவன் கொண்டுவருகின்ற சொத்தையே ''முதுசொம்'' என வரையறை செய்கிறது.<ref>பத்மநாதன், சி., ''இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85.</ref> திருமணத்தின்போது மனைவி கொண்டு வருகின்ற சொத்துக்களை ''சீதனம்'' என்ற சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், தேசவழமையின்படி, கணவனுக்கோ, மனைவிக்கோ கிடைக்கும் பரம்பரைச் சொத்துக்கள் ''முதுசம்'' எனக் கொள்ளப்படுவதாக எச். டபிள்யூ. தம்பையா குறிப்பிடுகிறார்.<ref>Thambiah, H. W., ''The Laws and Customs of The Tamils of Jaffna'', Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 150.</ref> [[யாழ்ப்பாண மண உரிமையும் வாரிசு உரிமையும் சட்டம்]],<ref>Jaffna Matrimonial Rights and Inheritance Ordinance.</ref> ''முதுசொம்'' குறித்து மேலும் விளக்கமாக வரையறை செய்கிறது. இதன்படி, ''முதுசொம்'' என்பது ஒருவர் தனது பெற்றோரிடம் இருந்து அல்லது அல்லது அவர்களுக்கு முந்திய நேரடிக் கால்வழியைச் சேர்ந்தோரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தையே குறிக்கும். அவ்வாறல்லாத பிற உறவினரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்துக்களை அச்சட்டம் ''உரிமை'' என்ற பெயரால் குறிப்பிடுகிறது.<ref>Thambiah, H. W., ''The Laws and Customs of The Tamils of Jaffna'', Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 156.</ref> மிகப் பழைய தேசவழமையின்படி, முதுசொச் சொத்துக்கள் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதில் பெண் வாரிசுகளுக்கு உரிமை கிடையாது. எனினும் பிற்காலத்தில், பெண்களுக்குக் கொடுக்கவேண்டிய சீதனத்தின் அளவு அதிகரித்தபோது, முதுசொச் சொத்துக்களையும் பெண் பிள்ளைகளுக்கே கொடுக்க வேண்டிய நிலை உருவானது.
 
==குறிப்புகள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/முதுசொம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது