விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
 
குறியீடுகள்- ஓர் அறிமுகம்
 
குறியீடுகளை அல்லது சின்னங்களை மூளைக்கு சில கட்டளைகளை பிறப்பிக்கும் விதத்தில் உருவகப்படுத்தி பன்னெடுங்காலமாக மனிதர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.குறியீடுகள் மனிதர்களுக்கு வழிகாட்டி பலகைகள் போல் பயன்பட்டு வருகின்றன.மனிதன் தன் கற்பனையில் தோன்றும் உருவங்களையே பொருட்களாக படைத்து, அவைகளை தனக்கு பயனுள்ளவைகளாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ளான்.மனிதனின் படைப்புகள் அனைத்தும் முதலில் அவன் கற்பனையில் தோன்றியவையே.பறவைகளை கண்ட மனிதன்,தானும் பறவைகளைப்போல் பறந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தான்,அதன் விளைவாகவே விமானம் உருவானது.கண்களால் பார்க்கப்படும் காட்சி பதிவுகளை, எப்படி அனுபவிப்பது என்பதை தன் கற்பனையில் கண்டுகளித்து,பிறகு அதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது மனித மூளையின் இயல்பாக உள்ளது.
மெய்,வாய்,கண்,மூக்கு,காது ஆகிய ஐந்தும் புலனுறுப்புகளாகும்.இவைகளில் கண்கள் மட்டும் சக்தி வாய்ந்த புலனுறுப்பாகும்.காணும் காட்சிகளை விரைவாக படமெடுத்து மூளைக்கு அனுப்பி,அதன் மூலம் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதிலும்,மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.கண்கள் காணும் காட்சிகள் (ஒளி வடிவம்) அனைத்தும் வலது மூளையிலும்,காதில் கேட்கும் செய்திகள்(ஒலி வடிவம்) அனைத்தும் இடது மூளையிலும் பதிவாகின்றன.
ஒருங்கிணைத்தல்,எச்சரிக்கை உணர்வு,எழுத்தாற்றல்,வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்தல்,உள்ளுணர்வு,நிலையான நினைவாற்றல்,படைப்பாற்றல்,கற்பனை,கோர்வையாக இல்லாமல் தனித்தனியாக இருப்பவைகளை கோர்த்து பொதுநிலை படுத்துதல் போன்றவை வலது மூளையின் செயல்களாகும்.
தர்க்கம் செய்தல்,பகுத்தறிதல்,கணக்கிடுதல்,தற்காலிக நினைவாற்றல்,பேச்சாற்றல்,வழக்கமான செயல்களை செய்தல் போன்றவை இடது மூளையின் செயல்களாகும்.
பஞ்ச பூதங்களாலானது பிரபஞ்சம்.இந்த பிரபஞ்சம் முழுவதையும் "விஷ்வம்" எனக்குறிப்பிடுவர்.இந்த "விஷ்வம்" என்னும் வார்த்தையிலிருந்து வந்ததுதான் "விஷ்னு" என்னும் பெயராகும்."விஷ்னு" என்றால் எங்கும் வியாபித்திருப்பவன் என்று பொருளாகும்.பஞ்ச பூதங்களுக்கு அப்பால் நின்று செயல்படும் இயற்கை சக்தியையே நாம் கடவுள் எனக்குறிப்பிடுகிறோம்.அந்த இயற்கை சக்தியே படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறது.பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தி நிற்பவை விந்து(ஒளி) மற்றும் நாதம்(ஒலி) ஆகும்.உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் விஷ்னு என்பதை குறிப்பிடும் விதமாக, உலகத்தை புருஷனாக,அதாவது மனிதனாக உருவகபடுத்தி,அவன் கைகளில் சங்கு மற்றும் சக்கரம் வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.சங்கு ஒலித்தத்துவத்தையும்,சக்கரம் ஒளி தத்துவத்தையும் குறிப்பவைகளாகும்.இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து செயல்களும் ஒலி,ஒளி தத்துவங்களாலேயே இயக்கப்படுகின்றன என்பதை தத்துவார்த்தமாக குறிப்பிடுவதுதான் விஷ்னு அம்சமாகும்.
 
சைவ மத கடவுளான நடராஜரும் ஒரு கையில் உடுக்கையும்,இன்னொரு கையில் தீச்சட்டியும் ஏந்தியிருப்பதைக்காணலாம். அதில் தீச்சட்டியானது ஒளித்தத்துவத்தையும், உடுக்கையானது ஒலித்தத்துவத்தையும் குறிப்பவையாகும்.
 
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.மனித உடலை மனித மூளை இயக்குகிறது.மனித மூளையில் வலது பக்க மூளையானது ஒளித்தத்துவத்தினாலும்,இடது பக்க மூளையானது ஒலித்தத்துவத்தினாலும் இயக்கப்படுகின்றன.இரு பக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், மனிதனால் பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய முடியும், புதிதாக எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும்.இதன் அடிப்படையில் உருவானதுதான் யந்திர,மந்திர சாஸ்திரமாகும்.
யந்திரங்கள் எழுத்து வடிவமாகவும், சித்திர வடிவமாகவும் அமைந்துள்ளன.மந்திரங்கள் ஒலி வடிவமாக அமைந்துள்ளன.யந்திர வடிவங்களை தன்னுள் கிரகித்து வைக்கும் தன்மையுடையது வலது மூளையாகும்.மந்திரங்களை உச்சரிக்க வைப்பது இடது மூளையாகும்.அதாவது யந்திரங்கள் ஒளி வடிவமுடையவையாகும், மந்திரங்கள் ஒலி வடிவமுடையவையாகும்.இதன் அடிப்படையில் தோன்றியதுதான் இந்து மதத்தில் காணப்படும் உருவ வழிபாடாகும்.இந்து மதத்தினர் தெய்வ உருவங்களை சித்திரமாக வரைந்து அல்லது சிலையாக வடித்து வைத்திருக்கிறார்கள்.அந்த உருவ அமைப்புகளை வார்த்தைகளால் வர்ணிப்பதே மந்திரமாகும். அதாவது சித்திரங்களில் அல்லது சிலைகளில் காணப்படும் உருவம் யந்திரமாகவும்,அந்த சித்திரங்கள் அல்லது சிலைகளின் வர்ணனை மந்திரமாகவும் கருதப்படுகிறது.
ஒவ்வொரு உருவ அமைப்பும் மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.சிலை வழிபாட்டின் மூலம் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதை அனுபவித்து அறிந்தவர்கள் இந்துக்கள்.சிலை வழிபாடு மட்டுமல்லாது ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு குறியீட்டை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.குறியீடுகள் அனைத்தும் ஒரு வகையான யந்திரங்களாகும்.
யந்திரப்பிரதிஷ்டையானது மனித உடலில் வலது மூளையிலும்,மந்திர உச்சாடனம் இடது மூளையிலும் செய்யப்படுகிறது.
சூட்சுமமாக இருப்பது ஸ்தூலமாய் இருப்பவைகளை கட்டுபடுத்தும்.பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலாலானது எனக்குறிப்பிடுவர். பஞ்ச பூதங்களுக்கு அப்பால் நின்று பஞ்ச பூதங்களையும் கட்டுபடுத்தி நிற்பவை விந்து,மற்றும் நாத தத்துவங்களாகும்.
 
நாம் ஸ்தூலமாய் காண்பவைகள் அனைத்தையும் படைத்து,காத்து,அழித்து நிற்பது கடவுள் என்னும் பரமாத்வாகும்.
ஒரு குறியீட்டை நாம் தொடர்ச்சியாக பார்த்துவந்தால்,அந்த குறியீடு நம் வலது பக்க மூளையில் ஆழமாக பதிவாகிவிடும். அந்த குறியீட்டை நம் மனக்கண்ணில் காணும்போது எத்தகைய வார்த்தைகளை நம் மனம் உச்சரிக்கிறதோ,அவ்வார்த்தைகள் ஸ்தூலமாய் உருவெடுக்கும்.
பஞ்சாக்ஷரமானது யந்திரமாகவும் கருதப்படுகிறது,மந்திரமாகவும் கருதப்படுகிறது. பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கும்போது ,அதை யந்திரமாகவும் மனக்கண்ணில் பார்க்கவேண்டும்.அக்ஷரம் என்றால் எழுத்து என்று பொருள்.அதை உச்சரிப்பதே மந்திரமாகும்.
சௌந்தர்ய லஹரியில் தேவியின் உருவம் உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணிக்கப்படுகிறது.அந்த வர்ணனையே மந்திரமாக கருதப்படுகிறது.ஒவ்வொரு வர்ணனையும் ஒரு வித பலன் தரக்கூடியதாகும்.சௌந்தர்ய லஹரியில் 100 ஸ்லோகங்கள் உள்ளன.ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்திரமாகும்.ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் சித்திரம் மற்றும் யந்திரம் உண்டு.
கோயில் பிரகாரங்களிலும்,கோபுரங்களிலும் பல்வேறு விதமான பொம்மை உருவங்கள் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.அவை மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.ஒவ்வொரு உருவமும் மனதில் ஒரு வித உணர்ச்சியை தூண்டக்கூடியவை.உணர்ச்சிகளுக்கு தகுந்தார் போல் மனிதன் இயங்கக்கூடியவன்.மனிதன் தன் இலக்கை அடைவதற்கு இத்தகைய தூண்டுதல்கள் அவசியமாகிறது.எனவே மனிதன் தான் விரும்பியதை அடைவதற்கு குறியீடுகள் பெரிதும் பயன்படும்.
 
 
 
 
 
 
 
 
{{வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
{{PageTab