'''ந.பிச்சமூர்த்தி''' ([[நவம்பர் 8]], [[1900]] - [[டிசம்பர் 4]], [[1976]]) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் [http://www.chennaionline.com/education/Books/02tamil.asp நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன].