நாதமுனிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:நாதமுனிகள்.jpg|thumb|250px|நாதமுனிகள்]]
 
'''நாதமுனிகள்''' பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஒரு ‌வைணவப் பெரியார்கி.பி 824-ஆம் இவர்வருடம் இன்றைய [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள [[காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் நாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். அரங்கநாதமுனி என்பதே இவரின் முழுப்பெயராம்.
 
வைணவப் பெரியார்களில் முதன்மையானவராக புகழப்படும் இவர், ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை காட்டுமன்னார்கோயிலுள்ள பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல், மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த இடத்திற்குகுருகூருக்கு [[திருநெல்வேலி மாவட்டம்]] வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
 
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய [[அரையர்]]கள்.
"https://ta.wikipedia.org/wiki/நாதமுனிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது