ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''ஆயிரத்தொரு இரவுகள்''' (''One Thousand and One Nights'' [[அரபு மொழி|அரபி]]: كتاب ألف ليلة وليلة) என்பது [[மையக்கிழக்கு]] மற்றும் [[தெற்காசியா]]வை சேர்ந்த [[எழுத்தாளர்]]களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் [[கதை]]களைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, [[யேமன்]], பண்டைக்கால [[இந்திய இலக்கியம்|இந்திய இலக்கியங்கள்]], [[பாரசீக இலக்கியம்|பாரசீக இலக்கியங்கள்]], பழங்கால எகிப்திய இலக்கியங்கள், [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியத்]] [[தொன்மம்|தொன்மங்கள்]], பண்டைச் [[சிரியா]], சின்ன ஆசியா, [[கலீபா]]க்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை [[இசுலாமிய பொற்காலம்|இசுலாமிய பொற்கால]]
இக்கதைகள் முதன் முதலாக 1704ல் ''இரவுகள்'' என்ற பெயரில் [[பிரெஞ்சு மொழி]]யிலும், பின்னர் 1706ல் ''அரேபிய இரவுகள்'' என [[ஆங்கில மொழி|ஆங்கிலத்திலும்]] மொழிபெயற்கப்பட்டன. தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.
வரிசை 15:
===மூலம்===
ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு காலக் கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் பாரசீக மற்றும் இந்திய நாட்டார் கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. இவை எட்டாம் நூற்றான்டில், ''அலிஃப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) என்ற பெயரில் அரபு மொழியில் முதன் முதலாக தொகுக்கப்பட்டன. அடிப்படையில் இந்த தொகுப்பில் இருந்த கதைகள் மிகவும் சிறியதாக இருந்தன. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றான்டுகளில் இவை விரிவுபடுத்தப்பட்டதோடு, பல புதிய கதைகளும் இணைக்கப்பட்டன.
====இந்திய தாக்கம்====
[[இந்திய இலக்கியம்|இந்திய இலக்கியங்களின்]] தாக்கம் ஆயிரத்தொரு இரவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக விலங்குகளின் கதைகளில் இந்திய நீதிக்கதைகளின் தாக்கம் மிகவும் அதிகம். பண்டைய [[சமசுகிருதம்|சமசுகிருத]] நூல்களான [[பஞ்ச
====பாரசீக தாக்கம்====
ஆயிரத்தொரு இரவுகளின் முதன்மைக் கதையான சாரியார் மற்றும் அவரின் மனைவி செகர்சதாவின் கதை, [[பாரசீக இலக்கியம்|பாரசீக இலக்கியத்தில்]] இருந்து எடுக்கப்பட்டது. குறிப்பாக சச்சானிய பேரரசின் காலத்தில் எழுதப்பட்ட ''யசர் அப்சான்'' (ஆயிரம் கதைகள்) எனும் நூல் இதே கதையமைப்பை கொன்டது. சாரியர் முதல் மனைவியின் துரோகம், அரசனின் பெண்கள் மீதான வெறுப்பு, தினம் ஒரு பெண்னை மணந்து மறுநாள் அவளை கொல்வது, மந்திரி மகளின் புத்திசாலித்தனம், அரசனுக்கு தினம் ஒரு கதை சொல்வது, அதை அன்றே முடிக்காமல் தொடரவிடுவது என ஆயிரத்தொரு இரவுகளின் முதன்மைக் கதையில் வரும் அனைத்தும் ''யசர் அப்சானில்'' இருந்து எடுக்கப்பட்டவையே. முதன்மைக் கதை மற்றுமின்றி வேறு பல கிழை கதைகளும் இதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதை பத்தாம் நூற்றான்டை சேர்ந்த இப்னு அல் நதீம் மற்றும் அல் மசூதி ஆகிய அரேபிய வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இருப்பினும் யசர் அப்சானின் மூலப் பிரதிகள் இன்று வரை கிடைக்கப்பெறாததால் இந்த கருத்தை ஏற்பதில் சிக்கல் நீடிக்கின்றது.
===மொழிபெயர்ப்பு===
ஆயிரத்தொரு இரவுகள் நூலின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு [[பிரெஞ்ச்]] மொழியில் வெளியிடப்பட்டது. அந்தோனி கல்லேன்டு என்பவரால் ''Les Mille et une nuits, contes arabes traduits en français'' (ஆயிரத்தொரு இரவுகள்-அராபிய கதைகள் பிரெஞ்ச்சுக்கு மொழிமாற்றப்பட்டது) என்ற பெயரில், மொத்தம் 12 தொகுதிகளாக 1704ல் இருந்து 1717 வரை இது வெளியிடப்பட்டது. இதில் அராபிய மூல நூலில் உள்ள கதைகளுடன் அலாவுதீனும் அற்புதவிளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகிய கதைகளும் சேர்க்கப்பட்டிருன்தன. இவ்விறு கதைகளை,
தொடர்ந்து [[ஆங்கிலம்]],
==இலக்கிய முக்கியத்துவம்==
ஆயிரத்தொரு இரவுகள், [[அராபிய இலக்கியம்|அராபிய இலக்கியங்களில்]] மிகவும் முக்கியமானது ஒன்று. கதைக்குள் கதை எனும் இதன் பானியானது பண்டைய இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் ஏற்கனவே இருந்த ஒன்றே என்ற போதும், ஆயிரத்தொரு இரவுகள் நூலுக்கு பிறகே ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து பல புதினங்கள் இதே நடையில் மேற்குலகில் எழுதப்பட்டன. குறிப்பாக அலாவுதீன், சிந்துபாத், அலிபாபா போன்ற கதை மாந்தர்களும் ஜின்கள், பகுமுத் மீன், பறக்கும் கம்பளம், மந்திர விளக்கு போன்ற தொன்மங்களும் பிற்காலத்திய [[மிகுபுனைவு]] நூல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்திலும்]] ஆயிரத்தொரு இரவுகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக [[சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்|சாமுவேல் டெய்லர் கோல்ரிட்சு]], தாமசு தி குயின்சி, [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்|வில்லியம் வேர்ட்வொர்த்]], ஆல்பிரட் டென்னிசன், [[சார்லஸ் டிக்கின்ஸ்|சார்லசு டிக்கின்சு]] ஆகியோர் இதன் முக்கிய இரசிகர்களாக இருந்தனர்.
1982ல் பன்னாட்டு வின்வெளி ஆய்வு ஒன்றியம் [[சனி
==பிற ஊடகங்கள்==
ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள், சித்திரக் கதைகள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளி வந்துள்ளன. இவற்றில் முதன்மையானது 1921ல் வெளிவந்த ''Der müde Tod'' (பொறுமையிலந்த மரணம்) எனும் திரைப்படம் ஆகும். [[இடாய்ச்சு]] மற்றும் [[ஆங்கில
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டை]] பொறுத்தவரை ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக கொன்டு வெளிவந்த முதல் திரைப்படம் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்)|அலிபாபாவும் நாற்பது திருடர்களும்]] ஆகும். 1941ல் வெளிவந்த இந்த படத்தில் [[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]] ஆகியோர் நடித்திருந்தனர். தொடர்ந்து அதே பெயரில் 1956ல் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)|மற்றொரு திரைப்படம்]] எடுக்கப்பட்டது. [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.சி. இராமச்சந்திரன்]] மற்றும் பானுமதி ஆகியோர் நடிப்பில் இது வெளிவந்தது. அதே போல 1957ல் அலாவுதீனும் அற்புத விளக்கும் எனும் திரைப்படம் ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் டி. எஸ். பாலையா நடிப்பில் வெளிவந்தது. பின்னர் அதே பெயரில் மற்றுமொரு படம் [[
1993ல் சாகர் பிலிம்சு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட ''அலிப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) எனும் தொடர், டிடி நேசனல் (தூதர்சன்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எசு.ஏ.பி (SAB TV), ஏ.ஆர்.ஒய் (ARY Digital - பாக்கிசுத்தான்), பி டிவி (BTV - வங்காளதேசம்), ஈ டிவி (ETV - வங்காளதேசம்) ஆகிய தொலைக்கட்சி நிலையங்களிலும் மறு ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது. மேலும் தினத்தந்தி நாளிதலில் 1960 முதல் கன்னித்தீவு எனும் சித்திரத் தொடர் வெளிவருகின்றது. இதுவும் ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக கொன்ட ஒரு தொடரே.
|